Song Category: Tamil

Parir Gethsemane – பாரீர் கெத்சமனே

Parir Gethsemane
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்

2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்

3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்

6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்

Paareer Gethsamanae Poongaavilen Naesaraiyae
Paaviyenakkaai Vaendudhal
Seidhidum Saththam Dhoniththidudhae

1. Dhaegamellaam Varundhi Soagamadaindhavaraai
Dhaevaadhi Dhaevan Aega Suthan Padum Paadugal Enakkaayae – Paareer

2. Appaa Ippaaththiramae Neekkum Nin Siththamaanaal
Eppadiyumum Siththam Seieyya Ennai Thaththam Seidhaen Endraarae – Paareer

3. Raththaththin Vaervaiyaalae Meththavumae Nanainthae
Immaanuvaelan Ullamurugiyae Vaedudhal Seidhanarae- Paareer

4. Mummurai Tharai Meedhae Thaangonnaa Vaedhanaiyaal
Munnavan Thaanae Veezhndhu Jebiththaarae Paadhagar Meetpuravae – Paareer

5. Anbin Arul Mozhiyaal Aarudhal Alippavar
Thunba Vaelaiyil Thaettrvaarindriyae Nondhu Alarugindraar – Paareer

6. Ennaiyum Thammai Poala Maatrum Immaa Naesaththai
Enni Yenniyae Ullam Kanindhu Naan Endrum Pugazhndhiduvaen – Paareer

Paareer gethsamanae translation

Behold my beloved in Gethsemane garden
The cry of prayer for me sinner is heard

The whole body in pain, sorrow stricken
God of gods, the only Son sufferings are for me – Behold

O My Father, if possible, let this cup pass from Me
However I have given myself to do your Will said He – Behold

His blood sweats drenching Him
Emmanuel did an heart melting prayer – Behold

Three times He prayed with unbearable sufferings
God fell Himself and prayed for sinners’ redemption – Behold

He who comforts with loving grace words
Cries bitterly at this time of distress with nobody to console – Behold

His great love of changing me like Himself
I will praise Him with my whole heart thinking this forever and ever – Behold

En Aathuma Nesa Maipare – என் ஆத்தும நேச மேய்ப்பரே

En Aathuma Nesa Maipare
என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

1. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும்

2. பாவிகட்கு உமது அன்பை
என் நடையாற் காட்டச்செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் – பேசும்

3. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் – பேசும்

Enthan Ullam Puthu Kaviyale – எந்தன் உள்ளம் புதுக் கவியாலே

Enthan Ullam Puthu Kaviyale
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

1. சென்ற காலம் முழுவதும் காத்தார் ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுகபெலன் அளித்தாரே – அல்லேலூயா

2. சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா

3. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா

4. களிப்போடு விரைந்தெமைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் – அல்லேலூயா

Aayiram Sthothirame – ஆயிரம் ஸ்தோத்திரமே

Aayiram Sthothirame
ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1. வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2. உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3. சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4. பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5. இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyoo
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

Vanthen Mel Irangum – வந்தென் மேல் இறங்கும்

Vanthen Mel Irangum
வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்

1. சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே

2. காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே

3. சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே

Azhaganavar Yesu Azhaganavar – அழகானவர் இயேசு அழகானவர்

Azhaganavar Yesu Azhaganavar
அழகானவர் இயேசு அழகானவர் (2)
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்

2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்

3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

Naanum En Veetaarumovendral – நானும் என் வீட்டாருமோவென்றால்

Naanum En Veetaarumovendral
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

Naanum en veetaarumovendral
Kartharaiye sevippom
neeyum sevippaayaa – neeyum sevippaayaa

Kartharaiye sevippathu
aagaatha thendru kandaal
yaarai nee sevippaai enbathai
indre theermaanam seivaai

Adimaiyaana nammaiyume
thevaathi thevan meetaar
maaperum adaiyaalangalai seithitta
kartharai sevippaayaa?

Nam paadhaiyil kaapaattriye
karththar nadathinaare
karththar thantha asir yaavum kandu
nadriyaai sevippaayaa?

Nanmaiyaana eevugalai
thevaathi thevan thanthaar
Keezhpadinthe avar saptham kettu
saatchiyaai jeevippaayaa?

Kirubaiyethe Deva Kirubaiyethe – கிருபையிதே தேவ கிருபையிதே

Kirubaiyethe Deva Kirubaiyethe

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்….களுடனே
ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிருபையிதே

2. வார்த்தையினால் அவர் தீர்த்….தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே

3. அன்பின் அக….லமும் நீ….ளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே

4. நல்ல போராட்டம் போரா….டி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும்… ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – கிருபையிதே

6. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்த்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய – கிருபையிதே

Kirubaiyidhe Deva Kirubaiyithe
Thaangi Nadatthiyathe
Yesuvile Pon Nesarile
Agamagizhnthe Naam Aananthippom

1. Aaruyir Anbaraai Eng…aludane
Jeeviya Paadhayile – Yesu Paran
Anuthinamum Vazhi Nadanthe
Avarathu Naamathil Kaathanare – Kirubayidhe

2. Vaartthayinaal Avar Theerth…thaar Endhan
Vyathiyum Vedhanayum Vaithiyaraai
Yesuvallaal Saarnthidavo
Igamadhil Veremak Kaarumillai – Kirubayidhe

3. Anbin Aga…lamum Nee…lam Uyaramum
Aazhamum Arinthunara – Anukkrakitthaar
Kiristhuvile Oru Manayaai
Sirushtitthe Niruthinaar Avar Sudharaai – Kirubayidhe

4. Nalla Poraattam Poraa…di Jeyitthe
Nithiya Jeevanai Naam Pattridave
Visuvaasatthil Nilaitthiduvom
Asaiyaathu Azhaippinai Kaathukkolvom – Kirubayidhe

5. Aaviyum Manavaattiyum… Aavaludan
Vaarumendrazhaikkindraare – Vaarumenpeer
Siyone Nee Paar Unakkaai
Naayagan Yesu Thaam Velippaduvaar – Kirubayidhe

6. Eththanaiyo Parisuththargal Marainthe
Magimai Serththanare – Pooranamaai
Kaaththanare Karththar Emai
Karunaiyinaal Thooya Sevai Seiyya – Kirubayidhe

 

Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே

Sthothiram Paadiye Potriduven
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

3. மாய உலக அன்பை – நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்