Song Category: Tamil

Deva Sayal Aga Mari – தேவ சாயல் ஆக மாறி

Deva Sayal Aga Mari

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்

4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்

7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்

Deva Sabayeelae Devan Yellutharulenar – தேவ சபையிலே தேவன்

Deva sabayeelae Devan Yellutharulenar

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

1. பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

4. உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்

5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

Deva Saranam Kartha Saranam – தேவா சரணம் கர்த்தா சரணம்

Deva Saranam Kartha Saranam

தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

1. தேவாதி
தேவனுக்கு சரணம்
இராஜாதி
இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்

2. கர்த்தாதி
கர்த்தனுக்கு சரணம்
காருண்ய
கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்

3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற
மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

Deva Sitham Niraivera – தேவ சித்தம் நிறைவேற

Deva sitham niraivera

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்

4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்

Deva sitham neraivera yennaiyum opadaikiraen
Deva satham yennullam balamaga thonikuthae

Mutkalukul malarkintrathor
Makkalai kavarum lelli pushpam pol
Yennaiyumae tham sayalai
Yentrenrum oruvakuvar

Munarinthu alithavarae
Mun nindru nalamudan nadatuvar
Sahalamum nanmaikendare
Satchiyai mudithiduvar

Poonaipola pudamitalum
Poonaga vilankuvaen yentrendurumae
Tiranikkumael sothethidar
Tankida belan allipar

Deva Um Karuniyam – தேவா உம் காருண்யம் நீக்கும் வாழ்வின் – O Lord Your tenderness

Deva Um Karuniyam
o lord your tenderness
தேவா உம் காருண்யம்
நீக்கும் வாழ்வின் கசப்பெல்லாம்
தேவா தாரும் அன்பை
தேவா உம் சவுந்தரியம்
மாற்றும் வாழ்வில் மாசெல்லாம்
தேவா தாரும் அன்பை

O Lord Your tenderness
Melting all my bitterness
O Lord I will receive
Your Love
O Lord Your loveliness
Changing all my ugliness
O Lord I will receive
Your Love

Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே

Deva Um Samugame yenathu piriyamay

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2

1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2

2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2

3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2

4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2

5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

Devanbibn Vellamae

1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய்ம் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
அய்யா, நின் அடி பணிந்தேன்.

2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
பாதையை தவறிடினும்,
கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
கோது பொறுத்த நாதா!

4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா! தற்காத்தருள்வாய்.

5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப்பீடம் படைப்பேன்!
மோச வழிதனை முற்றும் அகற்றி என்
நேசனே நினைத் தொழுவேன்.

6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
பிரித்திடுமோ தெய்வன்பை?

Devalayam Selvathu – தேவாலயம் செல்வதே மகிழ்ச்சியை

Devalayam Selvathu

தேவாலயம் செல்வதே மகிழ்ச்சியை கொடுக்கும் கர்த்தர் சமூகத்திலே
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் – 5
ஆனந்தம் ஆனந்தமே
பாடுவோம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா

Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத

Devan Arulia Solli Mudiyatha

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம்

1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்களே
இது உங்களாலே உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவே

2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
இது இருதயத்தின் அன்பின் ஆவியே
தேவன் தந்த நல்ல ஈவே

3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்
குறைவில்லாது நடத்துகின்றரே
நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்
தேவன் தந்த நல்ல ஈவே

4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
நன்மைகளைத் தருகின்றரே
இது தேவன் தரும் ஆசிர்வாதமே
தேவன் தந்த நல்ல ஈவே

Devanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்

Devanae Naan Umathundail

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து

3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்க் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்