Deva Um Karuniyam
o lord your tenderness
தேவா உம் காருண்யம்
நீக்கும் வாழ்வின் கசப்பெல்லாம்
தேவா தாரும் அன்பை
தேவா உம் சவுந்தரியம்
மாற்றும் வாழ்வில் மாசெல்லாம்
தேவா தாரும் அன்பை
O Lord Your tenderness
Melting all my bitterness
O Lord I will receive
Your Love
O Lord Your loveliness
Changing all my ugliness
O Lord I will receive
Your Love
தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா
2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து
3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்க் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்
1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
எந்தன் இயேசுவே – 4
2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
எந்தன் இயேசுவே – 4
கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார் – 2
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே – 2
1. படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் – 2
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – 2 (…கலங்கிடாதே)
2. ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன் மீது புரள்வதில்லை – 2
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – 2 (…கலங்கிடாதே)
3. சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை என்றும் தாங்கிடுமே – 2
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை அவர் அணைப்பாரே – 2 (…கலங்கிடாதே)
Karam Pidiththu Unnai Endrum Nadaththiduvaar
Kanmani Pol Unnai Endrum Kaaththiduvaar – 2
Kalangidaathe Thigaiththidaathe
Karththar Karam Unakku Undu Bayanthidaathe – 2