Song Category: Tamil

Deva Naan Ethinal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன் ராஜா நான்

Deva Naan Ethinal Viseshithavan
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்

1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு

Deva Naan Edhinal Viseshithavan
Raaja Naan Adhai Dhinam Yosipavan

Edhinaal? Idhu Edhinaal?
Neer Ennodu Varuvadhinaal
Edhinaal? Idhu Edhinaal?
Neer Ennodu Irupadhinaal

1. Megasthambam Melirundhu
Paadhukaakudhu
Paadhai Kaata Pagalellam
Kooda Selludhu

Anbana Devan Ennodu Varuvar
Adhu Podhum En Vazhvile – Deva

2. Thaagam Konda Deva Janam
Vaanamn Paakudhu
Aaval Konda Kanmalaiyum
Kooda Selludhu

En Yekkamellam En Devan Theerpaar
Sandhosham Naan Kaanuvaen

3. Vaazhkaiyil kasapugal
kalandhittaalum
Paasamulla oru maram
kooda varudhu

Maaravin neerai thaenaga maatrum
En naesar ennodundu

Devapitha Enthan Maippar – தேவ பிதா எந்தன் மேய்ப்பன்

Devapitha Enthan Maippar
1. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார்

2. ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

3. சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

4. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

1. Devapitha yenthan maipanallo
Sirumaiyi thalchi adaikilanae
Aavalai yenai paipulmael
Avar maithavar neet arulukinrar

2. Athumam thananai kulirapanne
Adiyen kalkalai neethiyanum
Neerthiyam pathaiyil avar nimitham
Nithamum sugamai nadatukinrar

3. Sa nizhal pallathirankidinum
Satrum theengu kandanjeenae
Vanabaran yennodirupar
Valai thadiyum kolumae thetrum
Pagaivar kethirae oru panthi

4. Paangai yenakenyerpaduthi
Suga thailam kondaen thalaiyae
Sugamai abesakam seikuvar
Devapitha yenthan maipanallo

Deva Prasannam Tharume – தேவா பிரசன்னம் தாருமே

Deva Prasannam Tharume

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்

1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே

2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்

3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்

4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே

5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே

6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே

Deva Sayal Aga Mari – தேவ சாயல் ஆக மாறி

Deva Sayal Aga Mari

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்

4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்

7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்

Deva Sabayeelae Devan Yellutharulenar – தேவ சபையிலே தேவன்

Deva sabayeelae Devan Yellutharulenar

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

1. பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

4. உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்

5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

Deva Saranam Kartha Saranam – தேவா சரணம் கர்த்தா சரணம்

Deva Saranam Kartha Saranam

தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

1. தேவாதி
தேவனுக்கு சரணம்
இராஜாதி
இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்

2. கர்த்தாதி
கர்த்தனுக்கு சரணம்
காருண்ய
கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்

3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற
மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

Deva Sitham Niraivera – தேவ சித்தம் நிறைவேற

Deva sitham niraivera

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்

4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்

Deva sitham neraivera yennaiyum opadaikiraen
Deva satham yennullam balamaga thonikuthae

Mutkalukul malarkintrathor
Makkalai kavarum lelli pushpam pol
Yennaiyumae tham sayalai
Yentrenrum oruvakuvar

Munarinthu alithavarae
Mun nindru nalamudan nadatuvar
Sahalamum nanmaikendare
Satchiyai mudithiduvar

Poonaipola pudamitalum
Poonaga vilankuvaen yentrendurumae
Tiranikkumael sothethidar
Tankida belan allipar

Deva Um Karuniyam – தேவா உம் காருண்யம் நீக்கும் வாழ்வின் – O Lord Your tenderness

Deva Um Karuniyam
o lord your tenderness
தேவா உம் காருண்யம்
நீக்கும் வாழ்வின் கசப்பெல்லாம்
தேவா தாரும் அன்பை
தேவா உம் சவுந்தரியம்
மாற்றும் வாழ்வில் மாசெல்லாம்
தேவா தாரும் அன்பை

O Lord Your tenderness
Melting all my bitterness
O Lord I will receive
Your Love
O Lord Your loveliness
Changing all my ugliness
O Lord I will receive
Your Love

Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே

Deva Um Samugame yenathu piriyamay

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2

1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2

2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2

3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2

4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2

5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

Devanbibn Vellamae

1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய்ம் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
அய்யா, நின் அடி பணிந்தேன்.

2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
பாதையை தவறிடினும்,
கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
கோது பொறுத்த நாதா!

4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா! தற்காத்தருள்வாய்.

5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப்பீடம் படைப்பேன்!
மோச வழிதனை முற்றும் அகற்றி என்
நேசனே நினைத் தொழுவேன்.

6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
பிரித்திடுமோ தெய்வன்பை?