Song Category: Tamil

En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம்

En Devan En Velicham

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்

2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்

Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே

Tholugirom Yenkal Pithaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

1. வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் — தொழுகிறோம்

2. தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

3. கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் — தொழுகிறோம்

4. கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம் — தொழுகிறோம்

5. சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதானம் எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம் — தொழுகிறோம்

6. அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

7. பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் — தொழுகிறோம்

Naan Anaathai Endru Aluthaen – நான் அனாதை என்று அழுதேன்

Naan Anaathai Endru Aluthaen

நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதையில்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்

1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன்

2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்

3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்

Inba Yesu Raja Vai Naan Parthal Pothum – இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

Inba Yesu Raja Vai Naan Parthal Pothum
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Inba iyeasu raajaavai naan paarththaal poadhum
Magimaiyil avaroadu naan vaazhnthaal poadhum (2)
Niththiyamaam moatcha veettil saerndhaal poadhum
Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum (2)

1. Yaesuvin raththathaalae meetkappattu
Vasanamaam vaeliyaalae kaakkappattu (2)
Karaithirai atra parisuththaroadu
Aezhaiyaan pon veedhiyil ulaaviduvaen (2)

2. Thoodhargal veenaigalai meettum poadhu
Niraivaana jeya koasham muzhangum poadhu (2)
Allaelooyaa geetham paadi kondu
Anbaraam yaesuvoadu agamagizhvaen (2)

3. Mul kreedam sooddappatta thalaiyai paarppaen
Porkreedam sooddi naanum pugazhndhiduvaen (2)
Vaarinaal adippatta muthugai paarththu
Ovvoru kaayangalaal muththam seivaen (2)

4. Ennullam nandriyaal niraindhidudhae
Endhanin baakkiya veettai ninaikkaiyilae (2)
Allaelooyaa aamen allaelooyaa
Varnikka endhan naavu poadhaadhaiyaa (2)

5. Aahaa! ekkaalam endru muzhangidumoa
Aezhai en aaval endru theerththidumoa (2)
Appaa! en kanneer endru thudaikkiraaroa
Aavalaai aengidudhae enadhullamum (2)

Paduvom Nam Devanai – பாடுவோம் நம் தேவனை

Paduvom Nam Devanai
பாடுவோம் நம் தேவனை
புது பாடல் பாடியே
அவர் நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்

1. சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே

2. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
என்றும் உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலை தோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது

3. அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே

Paaduvoam nam dhaevanai
Pudhu paadal paadiyae
Avar nallavar nanmai seibavar
Sarvavallavar avar adhisayamaanavar

1. Sagala janamae kaikotti kartharai
Kembeeramaai paaduvoam
Suramandalam maelathaalangal
Muzhangiyae thuthithiduvoam
Thaazhvil nammai ninaithaarae
Paer solliyae azhaithaarae

2. Karthar nallavar avar kirubai
Endrum ulladhenrae solluvoam
Avar kirubai maaraadhadhu
Endrendrum nilaiyaanadhu
Kaalai dhoarum pudhidhaanadhu
Nammai vittu vilagaadhadhu

3. Appaa pidhaavae endrae azhaikkum
Baakkiyam koduthaarae avar pillaiyaai naam maarida
Kirupaiyum pozhinthaarea
Paavangalai mannithaarae
Parisuthamaai maatrinaarae

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள

Deva Devanai Thuthithiduvom

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே

1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்

2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்

Deva Ennai Aasirvathium – தேவா என்னை ஆசீர்வதியும்

Deva Ennai Aasirvathium

தேவா என்னை ஆசீர்வதியும் – என்
எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடன் இருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
தேவனே இயேசுவே தேவனே
இயேசு தேவா

1. தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவ ஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும்

2. தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர்

3. இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும்

4. என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்

5. தெய்வீக வாசனை சாட்சிக்கே
தீங்கை முற்றும் நீக்கிடுமே
ஆவியும் அருளும் தங்கிடவே
ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்
தேவனே இயேசுவே தேவனே

Deva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம்

Deva Janamae Paadi Thuthipom

தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

3. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

4. தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்

5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம்

Deva Janame Magizndu Kalikooru – தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

Deva Janame Magizndu Kalikooru

தேவ ஜனமே
மகிழ்ந்து களிகூறு
பயங்கள் நீக்கி துதிபாடு

இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
இரட்சித்து உன்னை காத்திடுவார்

1. சிருஷ்டிகரே உன் நாயகர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
சர்வ பூமிக்கும் அவரே தேவன்

2. நித்திய காலத்து நீதியை
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
காத்தரின் கரத்தின் கிரீடமும்
இராஜ முடியும் நீ ஆவாய்

3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
பாழான தேசம் நீ அல்ல
எப்சிபா பியூலா
என்று சொல்லும்
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்

Deva Kirubai Endrum Ullathu – தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே

Deva kirubai endrum ullathu

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Deva Kirubai Endrumullathey
Avar Kirubai Endrumullathey
Avarai Potri Thuthithupadi
Halleluyah Endrarparipom

1. Nerukapattum(Nerukapattom) Madinthidamal
Karthar Tham Nammai Kathathaley
Avar Nallavar Avar Vallavar
Avar Kirubai Endrumullathu – Deva

2. Sathuru Senai Thodarnthu Soolgaiyil
Bagthanam Davidin Devan Namakku
Munsendrarey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva

3. Akkini Sothanai Patchika Vanthum
Mutchedi Thannil Thondriya Devan
Pathukatharey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva

4. Karirul Pondra Kashtangal Vanthum
Parinil Avar Enn Pathaiyil Oliyai
Ennai Nadathinar Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva

5. Vellam Pol Ninthai Merkolla Vanthum
Veeran Nehemiah Aviyai Alithey
Thida Nambikai Thairiyam Eentharey
Avar Kirubai Endrumullathu – Deva

6. Nithiya Devanam Sathya Paran than
Nithamum Nammudan Irupathaley
Avar Nallavar Endrum Thuthiyungal
Avar Kirubai Endrumullathu – Deva