Song Category: Tamil

Bayamilliae Bayamiilae – பயமில்லையே

Bayamilliae Bayamiilae
பயமில்லையே… பயமில்லையே
பயமே எனக்கு இல்ல – இனி

1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

3. சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே

4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு

5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே

6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

Bayamilliae… Bayamiilae
Payamae Enakku Illa – Inni

1. Anaathi Thaevan Ataikkalamaanaarae
Avarathu Puyangal Aathaaramaayitte

2. Iratchikkapatta Baakkiyavaan Naanae
Enakku Oppaana Manithan Yaarundu

3. Saghaayam Seiyum Kaedakamaanaarae
Vetri Tharukindra Pattanam Aanaarae

4. Paathukaapudan Sukamaai Vaalnthiduvaen
Thiraatcha Rasamum Thaaniyamum Unndu

5. Enathu Vaanam Paniyai Peythidumae
Malaiyai Polinthu Thaesathai Nirappidumae

6. Ethiri Enmun Kooni Kurukiduvaan
Avan Thalai Maelae Aeri Mithithiduvaen

Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன்

Namaku Oru Thagappan Undu
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா…அப்பா…தகப்பனே
என்று கூப்பிடுவோம்
2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொருநாளும்
கேட்பதை கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்
தானே
4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
எகிப்திலிருந்து என்னை அழைத்துக்
கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்
பழக்குகிறார்

Indru Mudhal Nan Unnai Aasirvadhipen – இன்று முதல் நான்

Indru Mudhal Nan Unnai Aasirvadhipen
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உமது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
2. செல்லும் இடமெல்லாம்
காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன்
கைவிடமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம்
நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல்
ஆளுகை செய்திடுங்கள்

Pothumaravare Puthumaianavare – போதுமானவரே

Pothumaravare Puthumaianavare
போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை(2) ஆயுளெல்லாம் ஆராதனை
1. எனக்காக தண்டிக்கப்பட்டடீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக்கொண்டேன்
2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால்-நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து – உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே-நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால்-நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே

Nanmaigalin Nayagane
நன்மைகளின் நாயகனே
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே

2. உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்

3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்

4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே

5. எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து மணமகளாக்கிவிட்டீர்

6. ஏசேக்கு, சித்னா இன்றோடு முடிந்தது
ரெகோபோத் தொடங்கியது தடைகளும் விலகியது

En Uyirae Andavarai – என் உயிரே

En Uyirae Andavarai
என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே
1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார்
6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

Nan Unaku Pothithu Nadakum – நான் உனக்கு போதித்து

Nan Unaku Pothithu Nadakum
நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு
1. ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல
2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே(ளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு
3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல்
4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
(அறிக்கை செய்வார்கள்)
5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில்
6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு

Thanirgal Kadakum Pothu – தண்ணீர்கள்

Thanirgal Kadakum Pothu
தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்
அக்கினியில் நடக்கும்போது கூடவே வருகின்றீர்…
மூழ்கிப் போவதில்லை நான் எரிந்து போவதில்லை
1. என்மேல் அன்புகூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
2. உமது பார்வையிலே
விலையேற பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
3. பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
ஆபத்திலே பாடி மகிழச் செய்தீரே
4. பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
5. என்னை படைத்தவரே உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
6. என்னை மீட்கும்படி தன்னை பலியாக்கினீர்
எனக்குள் வந்து விட்டீரே
(என்னை) ஆட்கொண்டு நடத்திச் செல்வீரே

Ennai Kakavum – என்னைக் காக்கவும்

Ennai Kakavum
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழி நடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்
2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
6. வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்
வளமான தோட்டமாக மாற்றுகிறீர்

Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும்

Ennai Nadathum Yesu Natha
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்