Song Category: Tamil

Manam Irangum Deivam Yesu – மனமிரங்கும்

Manam Irangum Deivam Yesu
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு

Udalai Kodu Ullathai Kodu
உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
2. நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு

Pasumaiyana Pul Veliyil – பசுமையான புல்வெளி

Pasumaiyana Pul Veliyil
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா

1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர்

2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்

3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல

4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே

5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே

6. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்

Pasumaiyana Pul Veliyil Padukka Vaippavarae
Amaithiyaana Thanneerandai Alaithu Selpavarae
Noyillatha Sugavaalvu Enakku Thanthavarae
Karampidithu Kadanillaamal Nadathi Selpavarae
En Maeiparae… Nal Aayanae
Enakondrum Kuraiyillappaa

1. Karangalaalae Annaithu Kondu
Sumanthu Selgireer
Maranthidaamal Unavu Koduthu
Belan Tharukireer

2. Puthiya Uyir Thinam Thinam Enakku Tharukireer
Um Peyarukkaerpa Parisuthamaai Nadathi Selkireer

3. Marana Irul Pallathaakil Nadakka Naernthaalum
Appaa Neenga Irupathaalae Enakku Bayamilla

4. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
Thaevan Veettil Thinam Thinam Thangi Makilvaenae

5. Enathu Ullam Apishaekathaal Nirampi Valiyuthae
Ellaa Naalum Nantip Paadal Paati Makiluthae

6. Ethirikalin Kann Munnae Virunthu Tharukinteer
Enathu Thalaiyil Narumanath Thailam Poosukireer

Akkini Nerupai Irangi Varum – அக்கினி நெருப்பாய்

Akkini Nerupai Irangi Varum
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்
3. ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்

Kangallai Pathiyavaipom – கண்களை பதிய வைப்போம்

Kangallai Pathiyavaipom
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்
1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
2. இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
3. தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
சோர்ந்து போகமாட்டோம்
4. ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் -நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு
5. மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு

Ummil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்

Ummil Naan Valgiren
உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்
1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம்தானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்
2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை
3. இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம்நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்
4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனிதருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்
5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின்

Namae Thiruchabai
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

Kaakum Deivam Yesu Irukka – காக்கும் தெய்வம்

Kaakum Deivam Yesu Irukka
காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே

1. இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர் தானே – 2

2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம்

3. காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு

4. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே

5. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்து கொள்மனமே
சீடன் அவன் தானே

6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார் மனது
உருகும் தெய்வம்

Kaakkum dheivam yaesu irukka
Kalakkam aen manamae
Kanneer aen manamae (2)
Kanneer aen manamae

1. Idhuvarai unnai nadathina dhaevan
Iniyum nadathich selvaar
Ebinaesar avardhaanae (2)
Ebinaesar avardhaanae – Kaakkum

2. Paadugal sagithaal paramanin varugaiyil
kooda senridalaam
Paadi magizhndhidalaam (2)
Paadi magizhndhidalaam – – Kaakkum

3. Kaangindra ulagam namadhu illai
kaanaadha paraloagam dhaan
Namadhu kudiyiruppu (2)
Namadhu kudiyiruppu – Kaakkum

4. Seekkiram neengidum ulagappaadugal
Magimaiyai kondu varum
Maravaadhae en manamae (2)
Maravaadhae en manamae – Kaakkum

5. Siluvai sumantdaal subaavam maa’rum
Therindhukol manamae
Seedan avan dhaanae (2)
Seedan avan dhaanae – Kaakkum

6. Malaigal vilagum kundrukal agalum
Kirubai vilagaadhendraar
Manadhu urugum dheivam (2)
Manadhu urugum dheivam – Kaakkum

Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும்

Andavarai Ekkalamum Potriduven
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்
1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்…
2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல
4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும்
8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்

Ninaivu Koorum Deivamae Nandri – நினைவு கூறும் தெய்வமே

Ninaivu Koorum Deivamae Nandri
நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா (4)
1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
பெருங்காற்று வீசச்செய்தீரே
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா
4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்