Song Category: Tamil

Idaivida Nandri Umakku Thane – இடைவிடா நன்றி

Idaivida Nandri Umakku Thane
இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Idaividaa nandri umakkuthaanae
Inaiyillaa dhaevan umakkuthaanae (2)

Enna nadandhaalum nandri aiyaa
Yaar kaivittaalum nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

1. Thaedi vandheerae nandri aiyaa
Therindhu kondeerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

2. Nimmadhi thandheerae nandri aiyaa
Nirandharam aaneerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

3. Ennai kandeerae nandri aiyaa
Kanneer thudaitheerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

4. Needhi dhaevanae nandri aiyaa
Vetri vaenthanae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

5. Anaadhi dhaevanae nandri aiyaa
Arasaalum dheivamae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

6. Nithiya raajaavae nandri aiyaa
Sathiya dheebamae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து

Thuthiyin Aadai Aninthu
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் – நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்

1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே களிகூறுவோம்
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம்
துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்

2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
அது தானனே நமது பெலன்
எத்தனையோ நன்மை செய்தவரை
இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்

3. நன்றியோடும் புகழ் பாடலோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே கிருபையுள்ளவரே
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்

4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
இன்று ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு

5. துயரத்துக்கு பதில் ஆறுதலே
இன்று ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்கு பதில் சிங்காரமே
இன்று சிங்காரம் சிங்காரமே

6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஜனங்கள் நாம்
அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
அவரின் ஆடுகள் நாம்

Thuthiyin Aadai Aninthu
Thuyaram Ellaam Maranthu
Thuthithu Magilnthiruppom – Nam
Thooyavaril Makilnthiruppom

1. Intha Naal Karthar Thantha Naal
Ithilae Kalikooruvom
Pulambal Illa Inni Alugaiyilla
Indru Pusithu Koduthu Konndaaduvom
Thuthithu Thuthithu Makilnthiruppom
Thuyaram Anaithum Maranthiruppom

2. Kartharukkul Naam Makilnthirunthaal
Athu Thaananae Namathu Belan
Ethanaiyo Nanmai Seithavarai
Indru Yetti Potti Pukalnthiduvom

3. Nandriyodum Pugal Paadalodum
Avar Vaasalil Nulainthiduvom
Nallavarae Kirubaiyullavarae
Endru Naalellaam Uyarthiduvom

4. Pulambalukku Pathil Aananthamae
Indru Aanantham Aananthamae
Odungi Pona Aavi Otippochu
Indru Ursaaga Aavi Vanthaachu

5. Thuyarathukku Pathil Aaruthalae
Indru Aaruthal Aaruthalae
Saampalukku Pathil Singaaramae
Indru Singaaram Singaaramae

6. Karthar Thaamae Nammai Undaakinaar
Avarin Janangal Naam
Avar Thaamae Nammai Nadathukindrar
Avarin Aadukal Naam

Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று

Nandri Nandri Endru
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
1. காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
2. உண்ணும்போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
4. சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5. சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
6. உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே

Jebam Kelum – ஜெபம் கேளும்

Jebam Kelum

ஜெபம் கேளும்.. பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா – 2

1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழு லட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும் – 2

2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும் – 2

3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும் – 2

4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும் – 2

5. மரித்துப்போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும் – 2

6. மிஷனரி ஊழியங்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும் – 2

7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும் – 2

8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும் – 2

Jebam Kelum.. Pathil Thaarum
Adhisayam Seiyum Iyya – 2

1. Nooru Kodi En Janangal
Yezhu Latcham Kraamangal
Yesuvai Kaana Vendum – 2

2. Umakkethiraai Seyalpaduvor
Um Paatham Vara Vendum
Umakkaai Vaazha Vendum – 2

3. Indhiyaavai Paazhaakkum
Anthakaara Vallamaigal
Agandru Poga Vendum – 2

4. Naadaalum Thalaivargalai
Naalthorum Paathukaathu
Gnanaththaal Nirappa Vendum – 2

5. Mariththupona Manitharellaam
Um Kuralaik Kettu Indru
Maruvaazhvu Pera Vendum – 2

6. Missionary Oozhiyangal
Menmelum Peruga Vendum
Unmaiyaai Uzhaikka Vendum – 2

7. Silaigal Vazhipaadu
Seyalattru Poga Vendum
Narseithi Parava Vendum – 2

8. Aalum Thalaivargal Koottam
Um Naamam Solla Vendum
Umakke Anja Vendum – 2

Mudiyathu Mudiyathu – முடியாது முடியாது

Mudiyathu Mudiyathu
முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது -என்னால் (இயேசையா)
1. திராட்சை செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்
2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே
3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்
4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால், உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா
5. பூமியிலே பரதேசி நான் -உமது
வார்த்தையை ஒருபோதும் எனக்கு
மறைத்து விடாதேயும்

Povas Povas – போவாஸ் போவாஸ்

Povas Povas
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா

1. உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா

2. நிறைவான பரிசுத நீர்தானையா – உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா

3. வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா

4. ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை

5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்

6. போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா

7. திருப்தியாக்கும் என் திரு உணவே
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே

Unga Uliyam Naan Yen – உங்க ஊழியம்

Unga Uliyam Naan Yen
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என்ராஜனே
எஜமானன் நீர் இருக்க
ேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை எனக்கு எதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
ிள்ளை எனக்கு ஏன் கவலை

Unga oozhiyam naan yaen kalanganum
Azhaichadhu neenga nadathi selveenga

1. Thittangal tharubavarum neerthaanaiyaa
Seyalpaduthi magizhbavarum neerthaanaiyaa
Ejamaananae en raajanae
Ejamaanan neer irukka
Vaelaikaaranukku yaen kavalai

2. Eliyaavai kaagam kondu poshitheerae
Sooraichedi soarvu neenga paesineerae
Dheivamae paesum dheivamae
Eliyaavin dhaevan irukka
Edhuvum ennai asaipadhillai

3. Pavulaiyum seelaavaiyum paadavaitheerae
Siraiyilae nalliravil jebikka vaitheerae
Kadhuvu thirandhana kattugal udaindhana
Kaakkum dheivam neer irukka
Kavalai enakku edharku

4. Aayan naan aadugalai arindhirukkiraen
Oruvaraalum parithu kolla mudiyaadhendreer
Nal aayanae en maeiparae
En aayan neer irukka
Aattukuttiku yaen kavalai

5. Thagappan than pillaigalai sumapadhupoala
Irudhivarai ungalai naan sumapaen endreer
Thagapanae thaangum dheivamae
Thagapan neer irukkaiyilae
Pillai enaku yaen kavalai

Magimayana Paralogam Irukayilae – மகிமையான பரலோகம்

Magimayana Paralogam Irukayilae
மகிமையான பரலோகம் இருக்கையிலே-நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ

அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

மகிமையான பரலோகம் இருப்பதனால்
நான் மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்

அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்,
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

Thoobam Pol En – தூபம் போல் என்

Thoobam Pol En
தூபம் போல் என் ஜெபங்ள்
ஏற்றுக்கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன்
2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்
என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா
3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே- நான்
நாட விடாதேயும்
4. என்கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்
5. என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்த வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்
6. இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே

Thulluthayya Um Naamam Solla – துள்ளுதையா

Thulluthayya Um Naamam Solla
துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே
2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே
3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே
4. நோய்கள் நீங்குதையா –உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே
5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே