Thoobam Pol En
தூபம் போல் என் ஜெபங்ள்
ஏற்றுக்கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன்
2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்
என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா
3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே- நான்
நாட விடாதேயும்
4. என்கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்
5. என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்த வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்
6. இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே
Ugantha Kaanikkayai
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
3. கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் -என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்
4. அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
Nadantha Thellam Nanmaike
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு
நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி
1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்ப்களை இன்பமாக மாற்றினீர்;
2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி
3. உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர்
5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி
6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி