Malai Mel Earuvom – மலைமேல் ஏறி

Malai Mel Earuvom
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெ
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
1. காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
2. உமது வார்த்தைகள் உணவாண் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்திறயும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *