1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்
2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே
3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே
Trachai Chadiya
திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா
1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு
2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்
Boomiyin Kudigale
பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் – அவர்
2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது
Yesuvin Karangalai
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
எதற்கும் பயமில்லையே
இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4)
1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும்போதுமே
2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்
3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே
6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்
Natha Um Thirukarathil
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்
1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2
2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
Unthan Aavi Enthan
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
1. உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும்
2. பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்