Song Category: Tamil

Aayiram Aayiram Padalgalal – ஆயிரம் ஆயிரம் பாடல்களால்

Aayiram Aayiram Padalgalal
ஆயிரம் ஆயிரம் பாடல்களால்
அதிசய நாதனை புகழ்ந்திடுவேன்
அனந்த கீதம் பாடிடுவேன் (2)

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் 2
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன் 2

வான தூத சேனை எல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மேன்மை வெறுத்து மானிடராய் பிறந்தாரே
வானிலும் பூவிலும் என்னாசை நீரே
வாழ்த்தி என்றும் திருநாமம் புகழ்ந்திடுவேன்

இஸ்ரவேலின் துதியில் வாசம் செய்யும் தூய தேவனே
பாலையிலே இரட்சகராய் பாதுகாத்து நடத்தினீரே
செங்கடலோ சேனைகளோ எதிர்த்து வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம் தட்டி துதித்திடுவேன்

ஆழியின் அலை போல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையால் உள்ளம் எல்லாம் நொறுங்கும் போதும்
தாயை போல கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்

Aayiram Aayiram Padalgalaal
Athisaya Naathanai Thuthithiduvaen
(Naan) Aanantha Geetham Padiduvaen-2
Aayiram Aayiram Padalgalaal…

Nallavar Yesu Vallavar
Avar Endrendrum Pothumaanavar-2
Naalthorum En Baaram Sumakkindravar
Nandriyaal Vanagiduvaen-2
Aayiram Aayiram Padalgalaal…

1. Vaanathoothar Senayellaam
Vaazhthugindra Parisuththarae
Vaana Magimai Vittu
Manodaraai Vanthavarae-2
Vaanilum Poovilum En Aasai Neerae
Vaazhthi Endrum Thiru Naamam Thuthithiduvaen-2-Nallavar

2. Isravelin Thuthigalil
Vasam Seiyum Thooya Devanae
Ikkattil Tham Janangalin
Ratchagaraai Varubavarae-2
Sengadalo Senaigalo Ethirae Vanthaalum
Sornthidaamal Karam Thatti Thuthiduvaen-2-Nallavar

3. Aazhiyun Alai Pol
Sothanaigal Peruginaalum
Akkiniyin Sothanayil
En Ullam Thalarnthaalum-2
Thaayaippol Karangalil Thaangi Ennai Neer Nadathi
Aatriya Kirubaikkaai Thuthithiduvaen-2-Nallavar

Yesuvin Anbai Vitu Piripavan Yaar – இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்

Yesuvin Anbai Vitu Piripavan Yaar

பல்லவி

இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
பசியோ, துன்பமோ, துஷ்ட துர்குணமோ?
வியாகுலமோ, விரோதங்களோ?
மிஞ்சும் நாச மோசம், கொடும் பட்டயமோ?
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

சரணம் 1
நிகழ் காரியமோ, வரும் காரியமோ
நிகராகாதே பரன் அன்பதற்கு!
வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ
சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

சரணம் 2
அதிகாரங்களும் அவமானங்களும்
சதி மோசங்களும் அதை மேட்கொள்ளதே
உயர்வானாலும் தாழ்வானாலும்
முடிந்தாலும் எல்லாம் இழந்தாலும்
பிரிக்க முடியாது அவர் அன்பை விட்டு
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

சரணம் 3
நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறதே
நன்மை தான் அவர் செய்வதெல்லாம் எனக்கு
துதி, ஸ்தோத்திரம், கனம், வல்லமை, மகிமை
பதிலாக செலுத்தி வணங்குகிறேன்
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

Christhuvin Sinthaiyai Tharipoom – இயேசுவின் சிந்தையை தரிப்போம்

Christhuvin Sinthaiyai Tharipoom
இயேசுவின் சிந்தையை தரிப்போம்
நேசமோடவர் அன்பில் சுகிப்போம்

சுத்த இதயத்தை சுதந்தரமாக்கி
நித்திய வாழ்வைதை நினைவதில் ஆக்கி
நித்திய வேதம் சர்வாயுதமாக்கி
கர்த்தரை பார்த்து நடப்போம்

கஷ்டங்கள் எல்லாம் கர்த்தருக்காக
நஷ்டம் என்றே உணராதவராக
கன மகிமை உண்டு பன்னுதட்காக
மன மடிவின்றி நடப்போம்

பொறுமை இல்லாதவர் முருமுறுத்தாலும்
உரிமை இல்லை என்று வெறுத்து விட்டாலும்
சிலுவையின் பாடுகள் சகித்தது போல
சினம் அடையாது நடப்போம்

கள்ள சகோதரர் கலக்கிடும் போது
சொல்லாதவைகளை சுமத்திடும் போது
அல்லலின் மேல் அல்லல் அணுகிடும் போது
சொல் தவறாமல் நடப்போம்.

பதிலுக்கு பதில் செய்யாமல் இருந்து
நிந்திப்பவர்காய் நிதமும் ஜெபித்து
சபித்திடும் சத்ருக்களை ஆசீர்வதித்து
பிதாவை போல் ஆக கடவோம்

மூல உபதேசங்களை கடந்து
உலகத்தின் வேஷத்தை மனமுகர்ந் தருத்து
நலமுடன் காண்பதை நாள்தோறும் உணர்ந்து
பூரணராக கடவோம்

Eppothum Naathanai Sthothari – எப்போதும் நாதனை ஸ்தோத்திரி

Eppothum Naathanai Sthothari

பல்லவி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள் தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து

அனுபல்லவி

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி – எப்போதும்

சரணங்கள்

1. இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை – எப்போதும்

2. சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப்போதும்

3. கிறிஸ்தேக நாயகன் கிருபை உன் பூரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் – எப்போதும்

4. வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும் படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் – எப்போதும்

5. தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை, மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி – எப்போதும்

6. துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
இன்பமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் – எப்போதும்

Eppothum Naathanai Sthothari – Naal
Thappaamal Aandavan Por Padhaathai Panindhu
Thappaana Paadhaigalil Sikkaamal Nee Vilagi

1. Ip Poodhalathil Nee Manujanma Maaginai
Yeidhukendrullathil Ennikkaiyaai Ninai
Appaa Enappaa Endralaikka Pirandhanai – Eppothum

2. Sandaalan Aaginai Un Dhoasham Neengavaye
Saayuchya Vaalvudan Santhosham Oangavay
Mandala Vindalan Unnai Kai Thaangavay – Eppothum

3. Kristheisu Naayagan Kirubai Un Pooranam
Gembeeramaaga Nee Sol Naamochaaranam
Paricheidham Jaalam Veindaam Thaalmai Mudharkaaranam – Eppothum

4. Veettilum, Kaattilum, Veliyilum, Valiyilum
Paattilum, Padippilum, Theittilum, Selippilum,
Naattilum, Nagarilum, Gnaana Muyarchiyilum – Eppothum

5. Thamboor, Kinnarangal, Jaalar, Veenai, Miru Dhangam, Thaplaavudan Sangeedha Naadhamaai
Ambala Sithanai Anboadu Paadi Aadi – Eppothum

6. Thunbangal Soolinum Dhukkathilaalinum
Inbamarindhilein Endrae Nee Thaalinum
Kanpanjadaiya Saavukendray Nee Veelinum – Eppothum

Unga Vethathode Paathathilae Vilunthu – உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து

Unga Vethathode Paathathilae Vilunthu

உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா (2)

என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே (2)

அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா (2)
நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே (2)
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே (2) – உங்க வேதத்தோட

என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே (2)
நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே(2)
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே (2) – உங்க வேதத்தோட

யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா (2)
நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே (2)
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே (2) – உங்க வேதத்தோட

Karthar En Meiparai Irukindrer – கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

Karthar En Meiparai Irukindrer
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
நான் தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
நான் வெட்கபட்டு போவதில்லை
அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்
நான் தாகமடைவதில்லை

எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம்
நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர்

மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பயந்திடமாட்டேன்
எந்தன் தேவன் என்னோடு உண்டு
உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே

பகைஞறுக்கு முன்பாக நீர் எனக்கு
பந்தியை ஆயத்தம் செய்தீர்
எந்தன் தலையை அபிஷேகம் செய்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது

ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும்
என்னையே பின்தொடரும்
கர்த்தருடைய வீட்டினிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

Nesare En Nesare – நேசரே என் நேசரே

Nesare En Nesare
நேசரே என் நேசரே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!
என் நேசமே என் பாசமே
என் அன்பரே என் இன்பரே!
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!

அன்னையே என் தந்தையே
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!
உந்தன் அன்பின் ஆழம் என்ன
அகலம், நீளம் என்ன
உயரம் என்ன வென்று அறியேனே!
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!

துணையாளரே மணவாளரே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்
உள்ளங்கையில் என்னை வரைந்துவைத்து தினம் ரசிக்கும்
அன்பு என்ன புரியலையே
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்று சொல்லும்

அன்பு ஒன்றும் புரியலையே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்

Appa Ennai Nesikirer Alavu Illai – அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை

Appa Ennai Nesikirer Alavu Illai

அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை நேசிக்கறீர்
எப்போதும் உங்க கையிலே ஏந்தி கண்மணி போல காக்கின்றீரே

கண்ணுறங்காம தூங்காம காக்கிற தெய்வம் நீர்தானே
இஸ்ரவேல காக்கிற தெய்வம்
தூங்கவும் இல்ல உறங்கவும் இல்ல

கைவிடாம விலகாம காக்கிற தெய்வம் நீர்தானே
யோசுவாவின் தெய்வம் என்னை கைவிடவும் இல்ல விலகவும் இல்ல

En Nesar Manavaalaar Ivarae – என் நேசர் மணவாளர் இவரே

En Nesar Manavaalaar Ivarae

என் நேசர் மணவாளர் இவரே
என் நண்பர் என் தோழர் இவரே
ஒரு நாளும் விலகாமல் ஒரு போதும் கைவிடாமல்
எப்போதும் மறவாதவர் அதனால்.. அதனால்…

உறவை வெறுத்தேன் உயிரை வெறுத்தேன்
உறவாய் வந்தீர் உயிராய் வந்தீர்…

அன்னை இவரே தந்தை இவரே
உற்றார் இவரே எனக்கெல்லாம் இவரே

வழியும் இவரே ஒளியும் இவரே
ஐீவன் இவரே சத்தியம் இவரே

Rajathi Rajan Magimaiyodu – இராஜாதி இராஜன்  மகிமையோடே

Rajathi Rajan Magimaiyodu

இராஜாதி இராஜன்  மகிமையோடே
வான மேகத்தில் எழுந்தருள்வார்!

எக்காள சத்த தொனி கேட்கிறதே
ஆட்டு குட்டியின் கல்யாண நாளிது!

பதினாயிரம் பரிசுத்தர்கள் சூழ
எழுந்து நீதி செய்குவார்

எந்தன் நேசர் தம் கரம் அசைத்தே
அன்பாய் என்னையும் அழைத்து செல்வார்

சுத்த பிரகாச ஆடையுடனே பரிசுத்தர்கள்
உம்மை பணிந்து கொள்வார்

கண்ணீருமில்லை கவலையில்லை
இயேசு ராஜாவே நம் சொந்தமானார்