Song Category: Tamil

Karthar En Meiparai Irukindrer – கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

Karthar En Meiparai Irukindrer
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
நான் தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
நான் வெட்கபட்டு போவதில்லை
அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்
நான் தாகமடைவதில்லை

எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம்
நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர்

மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பயந்திடமாட்டேன்
எந்தன் தேவன் என்னோடு உண்டு
உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே

பகைஞறுக்கு முன்பாக நீர் எனக்கு
பந்தியை ஆயத்தம் செய்தீர்
எந்தன் தலையை அபிஷேகம் செய்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது

ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும்
என்னையே பின்தொடரும்
கர்த்தருடைய வீட்டினிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

Nesare En Nesare – நேசரே என் நேசரே

Nesare En Nesare
நேசரே என் நேசரே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!
என் நேசமே என் பாசமே
என் அன்பரே என் இன்பரே!
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!

அன்னையே என் தந்தையே
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!
உந்தன் அன்பின் ஆழம் என்ன
அகலம், நீளம் என்ன
உயரம் என்ன வென்று அறியேனே!
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!

துணையாளரே மணவாளரே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்
உள்ளங்கையில் என்னை வரைந்துவைத்து தினம் ரசிக்கும்
அன்பு என்ன புரியலையே
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்று சொல்லும்

அன்பு ஒன்றும் புரியலையே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்

Appa Ennai Nesikirer Alavu Illai – அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை

Appa Ennai Nesikirer Alavu Illai

அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை நேசிக்கறீர்
எப்போதும் உங்க கையிலே ஏந்தி கண்மணி போல காக்கின்றீரே

கண்ணுறங்காம தூங்காம காக்கிற தெய்வம் நீர்தானே
இஸ்ரவேல காக்கிற தெய்வம்
தூங்கவும் இல்ல உறங்கவும் இல்ல

கைவிடாம விலகாம காக்கிற தெய்வம் நீர்தானே
யோசுவாவின் தெய்வம் என்னை கைவிடவும் இல்ல விலகவும் இல்ல

En Nesar Manavaalaar Ivarae – என் நேசர் மணவாளர் இவரே

En Nesar Manavaalaar Ivarae

என் நேசர் மணவாளர் இவரே
என் நண்பர் என் தோழர் இவரே
ஒரு நாளும் விலகாமல் ஒரு போதும் கைவிடாமல்
எப்போதும் மறவாதவர் அதனால்.. அதனால்…

உறவை வெறுத்தேன் உயிரை வெறுத்தேன்
உறவாய் வந்தீர் உயிராய் வந்தீர்…

அன்னை இவரே தந்தை இவரே
உற்றார் இவரே எனக்கெல்லாம் இவரே

வழியும் இவரே ஒளியும் இவரே
ஐீவன் இவரே சத்தியம் இவரே

Rajathi Rajan Magimaiyodu – இராஜாதி இராஜன்  மகிமையோடே

Rajathi Rajan Magimaiyodu

இராஜாதி இராஜன்  மகிமையோடே
வான மேகத்தில் எழுந்தருள்வார்!

எக்காள சத்த தொனி கேட்கிறதே
ஆட்டு குட்டியின் கல்யாண நாளிது!

பதினாயிரம் பரிசுத்தர்கள் சூழ
எழுந்து நீதி செய்குவார்

எந்தன் நேசர் தம் கரம் அசைத்தே
அன்பாய் என்னையும் அழைத்து செல்வார்

சுத்த பிரகாச ஆடையுடனே பரிசுத்தர்கள்
உம்மை பணிந்து கொள்வார்

கண்ணீருமில்லை கவலையில்லை
இயேசு ராஜாவே நம் சொந்தமானார்

Parisutha Pathayil Endrume Naan- பரிசுத்த பாதையில் என்றுமே நான்

Parisutha Pathayil Endrume Naan
பரிசுத்த பாதையில் என்றுமே நான் சென்றிட
பரனே நான் என்னையே முற்றிலும் படைக்கிறேன்.

1. இயேசுவே உம்மழகு என்னில் பிறர் காண
இவ்வேளையில் என்னை தத்தம் நான் செய்கிறேன்
இறங்கிடுவீர் எந்தன் வேண்டுதல் கேட்டு
இனிமேல் இவ்வுலகில் பிரகாசித்திடவே. (பரிசுத்த)

2. என்னை காண்போர் உம்மை காண உந்தன் சாயலை
தரித்தீர் இலோகத்தில் நான் தூய்மை அடைய
ஈசானே நீ அருள் புரிந்திடுவீரே
இன்று இந்த ஜெபவேலையில் பெற்று எழும்ப (பரிசுத்த )

3. ஆவியில் மென்மேலும் அனலாய் நான் ஜீவிக்க
ஆசீர் பொழிந்திடும் எந்தன் நேசர் இயேசுவே
மாசில்லா பரிசுத்தம் அடைந்திடவே
மன்னவனே உம் கிருபை ஈந்திடுவீரே (பரிசுத்த )

4. உம் பெலன் இல்லாமல் யாதும் செய்ய இயலேன்
உலகினில் ஜீவ சாட்சியாக நான் விளங்கிட
உன்னத பெலன் ஈந்து நினைத்திடுமே
உமக்காக ஜீவிப்பேன் எக்காலத்திலுமே (பரிசுத்த )

5. மண்ணுலக இன்பங்கள் ஒன்றும் வேண்டேனே
மாமிச இச்சைகள் நித்தம் நான் வெறுக்கிறேன்
விண்ணவர் சாயலை மகிமையாய் பெற்று
கண்ணிமைக்கும் பொழுதில் வேகம் மாறிடுவேனே (பரிசுத்த)

Parisutha Paathaiyil Endrume Naan Sendrida
Parane Naan Ennaiye Muttrilum Padaikkiren – 2

1. Yesuve Ummazhagu Ennil Pirar Kaana
Ivvelaiyil Ennai Thaththam Naan Seikiren
Irangiduveer Enthan Venduthal Kettu
Inimel Ivvulagil Pragaasithidave (… Parisutha)

2. Ennai Kaanpor Ummai Kaana Unthan Saayalai
Tharitheere Logathil Naan Thooimai Adaya
Eesane Nee Arul Purinthiduveere
Indru Intha Jebavelaiyil Pettrelumba (… Parisutha)

3. Aaviyil Menmelum Analaai Naan Jeevikka
Aasir Pozhinthidum Enthan Nesar Yesuve
Maasillaa Parisuththam Adainthidave
Mannavane Um Kirubai Eenthiduveere (… Parisutha)

4. Um Belan Illaamal Yaathum Seyya Iyalen
Ulaginil Jeeva Saatchiyaaga Vilanga
Unnatha Belan Eenthu Ninaithidume
Umakkaaga Jeevipen Ekkaalathilume (… Parisutha)

5. Mannulaga Inbangal Ondrum Vendene
Maamisa Ichchaigal Niththam Naan Verukkiren
Vinnavar Saayalai Magimaiyaai Pettru
Kannimai Pozhuthil Vegam Maariduvene (… Parisutha)

Kadaisikala Abishekham – கடைசி கால அபிஷேகம்

Kadaisikala Abishekham

கடைசி கால அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே

அக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் காற்றாக வீசிடுமே
ஜுவ நதியாக பாய்திடுமே

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்கதரிசனம் உரைத்திடவே

கர்மேல் மலை ஜெப வேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாப் நடுங்கின போல்
அக்கினி மழையாக பொழிந்திடுமே

சீனாய் மலை மேலே
அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Appa Seitha Nanmaigalai Ninaichu Paarkiren – அப்பா செய்த நன்மைகளை நினைச்சு பார்க்கிறேன்

Appa Seitha Nanmaigalai Ninaichu Paarkiren

அப்பா செய்த நன்மைகளை
நினைச்சு பார்க்கிறேன்
ஆர்வத்தோடு நன்றி சொல்லி
துதித்து மகிழ்கிறேன் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா – 4

1. நான் செய்த பாவங்களை மன்னித்தீரே
உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே – 2

2. வாதை என் கூடாரத்தை அணுகாது என்று
வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா – 2

3. இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது
மகிழ்ந்து களிகூர வைத்தீரையா – 2

4. உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே
கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே – 2

5. அறியாத புரியாத காரியங்களை
கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா – 2

6. நோய்களாலே துவண்டு போன அந்த நேரத்தில்
சுகம் தந்து என்னையும் காத்தீரையா – 2

Appa Seitha Nanmaigalai
Ninachu Paarkkiren
Aarvathodu Nandri Solli
Thuthithu Magizhkiren – 2

Nandri Raja Yesu Raja Nandri Raja – 4

1. Naan Seitha Paavangalai Mannitheere
Um Maganaai Ennaiyum Yetru Kondeere – 2

2. Vaathai En Koodarathai Anugaathu Endru
Vaazhnaalellaam Kaathu Vantheeraiyya – 2

3. Illaathathum Pollaathathum Solliya Pothu
Magizhnthu Kalikoora Vaitheeraiyya – 2

4. Uchchithamaana Kothumaiyaal Boshitheere
Kanmalaiyin Theninaal Thaagam Theertheere – 2

5. Ariyaatha Puriyaatha Kaariyangalai
Koopitta Nerangalil Ariviththeeraiyya – 2

6. Noygalaale Thuvandu Pona Antha Nerathil
Sugam Thanthu Ennaiyum Kaaththeeraiyya – 2

Vallamai Gnanam Neethiyum Nirantha – வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த

Vallamai Gnanam Neethiyum Nirantha
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் -2
வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் -2

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே -2

1. கல்லான என் உள்ளம் அதை
உடைத்திட்ட நேசம் அது
கனிவான தம் அழைப்பிதழால்
அழைத்திட்ட நேசம் அது -2

உலகிலே காணாத நேசம்
என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
இதுவரை அறியாத வாழ்வை
என் பரமனின் பாதத்தில் கண்டேன்

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே

2. காணாமல் நான் அலைந்திருந்தேன்
தேடிடும் நேசம் கண்டேன்
கண் திறந்து கண்ணீர் துடைத்த
நாதனின் நேசம் கண்டேன் -2

தரணியில் உணராத மகிழ்ச்சி
தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
நீதியின் வாழ்வெமக்களித்த
நீதி தேவனின் நீதியை அறிந்தேன்

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே – வல்லமை ஞானம்

Jillena Kulirkaatru – ஜில்லான குளிர் காற்று

Jillena Kulirkaatru
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார் -2

1. நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே -2

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர் -2

2. மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே -2

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே -2

Jillaana Kulir Kaatru Veesum Neramathu
Meloga Thoothar Koottam Paadum Velaiyathu
Mannin Maantharum Katharum Neramathu
Nam Mesiyah Mannil Uthithaar – 2

1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai
Saasthirigal Pinthodarnthaare
Vellaipolam Thoobavarkkam Allichendre
Arpanithaar Avar Thiru Munne – 2

Manthai Meippargal Puthu Gaanam Paadiye
Vinthai Kaanave Virainthodi Sendranar – 2

2. Maanidarin Paavarogam Maattridave
Maa Jothi Maanidaraanaar
Unnai Meetka Thammai Paliyaaga Thantha
Avar Anbirku Inaiyillaiye – 2

Naasarethilor Nanmai Piranthathe
Nambinorkkellaam Athu Nanmai Alithathe – 2