நான் உனக்காக (மகனே) நான் உனக்காக
என்னை நம்பி வாழ்கிறாய் நான் உனக்காக – 2
நீ எனக்காக இறைவா நீ எனக்காக
உன்னை நம்பி வாழ்கிறேன் நீ எனக்காக – 2
1. பொழியும் நல்ல வானம் தந்தேன் நான் உனக்காக
விளையும் நல்ல பூமி தந்தேன் நான் உனக்காக
இரவும் பகலும் பிரித்து வைத்தேன் நான் உனக்காக
படைத்தவை அனைத்தும் நலமெனக்கண்டேன் நான் உனக்காக (…நான்)
2. வானம் போல மனதை தருவேன் நான் உனக்காக
பூமி போல பலனை தருவேன் நான் உனக்காக
பகலை போல ஒளியை தருவேன் நான் உனக்காக
இருளை போல பொறுமை கொள்வேன் நான் உனக்காக (…நான்)
3. அன்பு செய்யும் அருளை தந்தேன் நான் உனக்காக
மன்னிக்கின்ற இதயம் தந்தேன் நான் உனக்காக
ஏற்றுக்கொள்ளும் மனதை தந்தேன் நான் உனக்காக
மாற்றம் செய்யும் வலிமை தந்தேன் நான் உனக்காக (…நான்)
உம்ம விட்டா யாரும் இல்ல இயேசையா
உம்ம விட யாரும் இல்ல இயேசையா – 2
நீங்க போதும் எனக்கு (2)
நீங்க போதும் (3) எனக்கு – 2 (…உம்ம)
1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2
என்னுடைய உழைப்பை யார்வந்து பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2 (…நீங்க போதும்)
2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே – 2 (…நீங்க போதும்)
3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே – 2
என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே – 2 (…நீங்க போதும்)
Umma Vittaa Yaarum Illa Yesaiyaa
Umma Vida Yaarum Illa Yesaiyaa – 2
அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே (2)
முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார்
மகிமைபடுத்தினார் இன்னும் மகிமைபடுத்துவார் (2)
1. பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போலாய் விரித்தவரும் அவரே – 2
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே (2)
உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே (2) (…அவர் துதி)
2. வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே – 2
மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே (2)
உலகம் முடியும்வரை துணையாய் நம்முடன் இருப்பவரே (2) (…அவர் துதி)
3. இழந்து போன என்னை தேடி இரட்சிக்க வந்தவரே
பாவ குழியில் என்னை மீட்டு புது வாழ்வு தந்தவரே – 2
ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையால் காப்பவரே (2)
உலகம் முடிவில் என்னை அழைத்து பரலோகில் சேர்ப்பவரே (2) (…அவர் துதி)