Song Category: Tamil

Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

Puviaalum Mannavan
புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்

வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி

2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

Potri Paadukindren – போற்றி பாடுகின்றேன்

Potri Paadukindren

போற்றி பாடுகின்றேன் நான் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே

மகிமை செலுத்துகிறேன் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே

Potri Paadugindraen Naan… Deva
Undhan Naamathi… Deva
Undhan Naamamae Uyarndha Naamamae
Magimai Seluthugiraen Deva
Undhan Naamathai Deva
Undhan Naamamae Uyarndha Naamamae

Unthan Naamam Menmai – உந்தன் நாமம் மேன்மை போல்

Unthan Naamam Menmai
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே

நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே

உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே…
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே

Ekkala Satham Vaanil

Ekkala Satham Vaanil
பல்லவி

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

சரணங்கள்

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

Seer Yesu Nathanukku

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு

பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

Seer Yesu Naathanukku Jeyamangalam Aathi
Thiriyeka Naathanukku Subamangalam

Paaraetru Neethanukku Parama Porpaathanukku
Naeraetru Pothanukku Niththiya Sangithanukku

Aathi Saru Vaesanukku Yesanukku Mangalam
Akila Pirakaasanukku Nesanukku Mangalam
Neethiparan Paalanukku Nithiya Kunnaalanukku
Othum Anukoolanukku Uyar Manuvaelanukku

Maanaabi Maananukku Vaananukku Mangalam
Valar Kalai Kiyaananukku Njaananukku Mangalam
Kaanaan Nal Thaeyanukku Kanni Mariseyanukku
Konaar Sakaayanukku Kootru Petha Leyanukku

Pathu Latchanathanukuch Suthanukku Mangalam
Parama Pathanukku Nithanukku Mangalam
Sathiya Visthaaranukuch Saruvaathi Kaaranukku
Paththar Upakaaranukku Parama Kumaaranuku

Ennai Anantha Thailathal – என்னை ஆனந்த தைலத்தால்

Ennai Anantha Thailathal

என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)

1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு
எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

3. என்னை அக்கினி ஆவியால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

4. என்னை பெலத்தின் ஆவியால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

5. என்னை வல்லமை ஆவியால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

6. என்னை வரங்களின் ஆவியால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

7. என்னை கிருபையின் ஆவியால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

Ennai Anantha Thailathal
Abishaegam Seithedum Aaviyanavarae – (4)

Aaviyanavarae Anbin Aaviyanavarae – (4)

1. Varanda Nilangal Vayalveli
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

2. Ularntha Yelumpugal
Uyirodezhumpattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

3. Ennai Akini Aaviyaal
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

4. Ennai Belanthin Aaviyaal
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

5. Ennai Vallamai Aaviyaal
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

6. Ennai Varangalin Aaviyaal
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

7. Ennai Kirubaiyin Aaviyaal
Aagattum Aaviyanavarae – (2)
Anbin Aaviyanavarae – (2) — Ennai

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

Agora Kasthi Pattorai

1. அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?

2. சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த,
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்?

3. அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து,
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து,
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர், என் நாதர்.

Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள்

Magilnthu Kalikurungal
மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

Malarae Malarae – மலரே மலரே வெள்ளி

Malarae Malarae

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Malarae Malarae Velli Malarae Pon Manthaarappozhuthu .. Im
Mannil Puuththa Malarae – Uyar Vinnin Vaenthar Varavu

1. Vaanilae Manthaappu Vin Thuuthar Manathil Sirippu
Ulakil Amaithi Vaazhum Makizhssi Naalum Nilavum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

2. Vaazhvilae Vanthaalum Ennaimaarri Amaikka Vaarumae
Ulakam Ummaik Kaanum Uvakai Kollum Naalum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

Mei Bhakathara – மெய் பக்தரே நீர்

Mei Bhakathara
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்