Ulaga Gana Magimai Yellam – உலக கன மகிமை எல்லாம்

Ulaga Gana Magimai Yellam
உலக கன மகிமை எல்லாம்
துதி கன மகிமை எல்லாம்
இயேசு உமக்கே தானே!
என்றென்றும் துதித்திடுவேன்-2
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் மகத்துவமானவர்-2
இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை

1. உம் கண்களின் வெளிச்சம்
சூரிய ஒளியைப் போல்
என்றென்றும் ஜொலித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா

2. உம் பாதங்கள் வெண்கலம்
உந்தன் குரல் பெருவெள்ளம்போல்
எங்கெங்கும் தொனித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா

Deva Aaviye Yengal – தேவ ஆவியே எங்கள்

Deva Aaviye Yengal

தேவ ஆவியே!
எங்கள் தூய ஆவியே!- 2
உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!
உமது வல்லமையே இன்றே நிரப்புமே! – தேவ

1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த
தைலத்தால் நிரப்புமே!
தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே!-2 – தேவ

2. அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2
எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 – தேவ

3. உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம் -2
உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே -2 – தேவ

Neer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை

Neer Enthan Kottai

1. நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் துருகம்
நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே
நீர் எங்கள் ராஜா
சாரோனின் ரோஜா – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் போற்றுவேன்
உம்மையே நான் புகழுவேன்-2

2. நீர் பரிசுத்த தேவன்
நீர் மகத்துவ தேவன்
நீர் வல்லமை தேவன் – இயேசுவே
நீர் எங்கள் சத்தியம்
நீர் எங்கள் நித்தியம்
நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே

உம்மைப்போல் ஒருவர் இல்லை
உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர்
உம்மையே நான் வாழ்த்துவேன்
உம்மையே நான் வணங்கிடுவேன்-2

Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்

Kartharukkaga Porumaiyudan

கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

2. மரணக்கட்டுகள் என்னை
சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
விடுவித்த தேவன் அவர்
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக

3. ஆத்துமாவை மரணத்திற்கும்
கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும்
தப்புவித்த தேவன் அவர்
அவருக்கே செய்த எந்தன்
பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

Maranam Thuthiyathu – மரணம் துதியாது பாதாளம்

Maranam Thuthiyathu

மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்

1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

2. நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

Aarathanai Seyvome – ஆராதனை செய்வோமே

Aarathanai Seyvome

Paava Setril
ஆராதனை செய்வோமே
பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
என்னைத் தூக்கி எடுத்த
கிருபைக்கு நன்றி
படுகுழியில் உயர்த்தி வைத்த
கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி

1. நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
என் பெலவீன நேரத்தில் எல்லாம்
என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)

2. நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)

3. நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
என் வியாதியின் வேதனை எல்லாம்
நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)

Paraloga Rajave – பரலோக ராஜாவே

Paraloga Rajave
பரலோக ராஜாவே
சிலுவையின் நாயகனே
பூவுலகின் மன்னவனே-2
படைக்கின்றோம் – எங்களது
ஆவி ஆத்மா சரீரத்தை
உம் திரு பாதத்திலே-2

1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
கன்மலையின்மேல் நிறுத்தினீரே
கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக

2. கருவில் எம்மை கண்டீரே
கண்மணி போல் காத்தீரே
கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
நொறுங்கிப் போன நிலைமையிலே
எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக

3. சோதனையின் பாதைகளில்
சோர்ந்த வேளை எல்லாம்
சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
பெற்ற அன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
என்று அற்றி தேற்றினீரே! – பரலோக

Saronin Rojave – சாரோனின் ரோஜாவே

Saronin Rojave

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே-2
பதினாயிரம் பேர்களில் சிறந்தவரே
பணிகின்றோம் உம் பாதத்தில்-2

ஆதியும் அந்தமானவரே!
எந்தன் ஆருயிரின் நாயகரே!
அதிசயமானவரே! – என்னை
ஆட்கொண்ட ஆண்டவரே! – சாரோனின்

பரிசுத்தர் பரிசுத்தரே! – எங்கள்
பரலோக ராஜாவே!
கர்த்தாதி கர்த்தர் நீரே!
என்னை காத்திடும் கேடகமே – சாரோனின்

பொன்னகர் உயர்ந்தவரே! – எங்கள்
உத்தமர் இயேசு ஐயரே!
உயர்த்தி மகிழுவேன் – என்று (உம்மை)
பாடி போற்றுவேன்! – சாரோனின்

Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்

Isravelin Devane

இஸ்ரவேலின் தேவனே எங்கள்
ஈசாக்கின் தேவனே
ஆபிரகாமின் தேவனே எங்கள்
ஆருயிர் நண்பனே

1. உளையான சேற்றினின்று
என்னை விடுவித்த தேவனே
கன்மலைமேல் நிறுத்தி என்னை
உயர்த்திய தேவனே – இஸ்ரவேலின்

2. என்னை பிழைக்க வைத்தீர்
உந்தன் சாட்சியாய் மாற்றினீர்
கவலையிலும் கண்ணீரிலும் (எந்தன்)
உதவின எபிநேசரே – இஸ்ரவேலின்

3. புதுவாழ்வு அளித்தவரே
புதிய பெலனால் நிரப்பிடுமே
உயிருள்ள நாட்களெல்லாம் (எந்தன்)
உயர்த்தியே பாடுவேன் – இஸ்ரவேலின்

Yesuvai Pol Oru Nesar – இயேசுவைப் போல் ஒரு நேசர்

Yesuvai Pol Oru Nesar

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
இயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லை
இயேசுவே உந்தன் நேசரே
இயேசுவே உந்தன் மீட்பரே-2

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
ஓடிவா நீ இயேசுவிடம்
நானே உனக்கு சமாதானம்
நானே உனக்கு ஆறுதல்
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்-2
நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
நானே உன்னை ஆதரிப்பேன்
கலங்காதே திகையாதே என்றாரே
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்
மாராவின் நீரை மதுரமாக
மாற்றின தேவன் நான் என்றார்
மாறாதவர் உன்னை அழைக்கிறார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்