Nalla Nanban Yesu
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார் (2)
மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே (2)
1. கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே
கவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே (2)
உலக பாடுகள் உலக வேதனை (2)
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே – நல்ல நண்பன்
2. ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே (2)
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் (2)
உன்னை விட்டு போகுமே
உன்னை விட்டு விலகுமே – நல்ல நண்பன்
Sathikalam Neva Nanbane
சாதிக்கலாம் நீ வா நண்பனே
உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
நீயும் சாதனை செய்திடலாம்
1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலர்கள் மணம் வீசுதே
உறவுகள் இல்லாத பறவைகள் கூட
மகிழ்வுடன் வாழ்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்
2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
ஆதவன் ஓளி வீசுதே
வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
தினமும் ஒளிர்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்
En Kirubai Unakku Pothum
என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் நான்
1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் – (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்கவில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை – என்
2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயோ இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயோ விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் – (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு – என்
Koodum Ellam Koodum
கூடும் எல்லாம் கூடும்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
கூடும் எல்லாம் கூடும்
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை
அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை
இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும்
1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் நிலைமையை மாற்ற
அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் துக்கத்தை போக்க } – 2 – கூடும்
2. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
ஒன்றும் இல்லவே இல்லை
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
3. கடனா அதை அடைக்கக்கூடும்
கடினம் அதை முறிக்கக்கூடுமோ
வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடுமோ
கூடாதது ஒன்றுமில்லை
சோர்வை தோற்றக்கூடும்
கண்ணீரை மாற்றக்கூடும்
பிரிவை சேர்க்கக்கூடும்
கூடாதது ஒன்றுமில்லை) – 2 – கடனா
– கூடும்
Neere Ennai Kaividaadhavar
நீரே என்னைக் கைவிடாதவர்
விட்டு விலகிடாதவர்
வழியில் காத்து நிற்பவர்
நீரே என்னை முற்றும் காத்தவர்
என்னில் அன்பு கூர்ந்தவர்
என்றும் மாறிடாதவர்
உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
உலகை என்றும் ஆளுமே
எம்மை காக்க வல்லதே
உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
கவலை மறையச் செய்ததே
என்னை வாழவைத்ததே – நீரே
எனக்காய் பாவம் சுமந்தீர்
துயரம் அடைந்தீர்
முழுதும் சகித்தீர்
நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
என்னை அளவில்லா அன்பு செய்தீர்
கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
என் கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
ஜீவனைத் தந்தீர்
உம்மை துதித்திடுவோம் (2)
நீதி என்றும் நிலைக்கும்
உந்தன் நாமம் மேன்மையாகும்
நீரோ என்னை அழைத்த
இந்த அழைப்பும் மேன்மையாகும்
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே
For Song CD/DVD please call/WhatsApp David @+91-9025658484(will be send via Postal/Courier)
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிஞ்சுருப்பேன்
என் தேவா.. என் ராஜா..
உம் கிருபை போதுமே – (2)
1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கிவிட நீர் ஓடோடி வந்தீரே
சொத்தோ சுகமோ தேவை இல்ல
சொந்தம் பந்தம் நாடவில்ல (..என் தேவா)
2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும் (..என் தேவா)
3. தாயின் கருவினிலே என்னை தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன் (..என் தேவா)
Yacob Ennum Siru
யாக்கோபு என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் கலங்கி விடாதே
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது
பலவீனன் ஆவதில்லை சுகவீனம் தொடர்வதில்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது