Kandene Um Thuya – கண்டேனே உம் தூய

Kandene Um Thuya
கண்டேனே உம் தூய அன்பை
அதில் களங்கம் இல்லையே
கேட்டேனே உம் அன்பின் குரலை
உள்ளம் நொறுங்கின நேரத்தில்

பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்
ஒரு நாளில் நீ வீழ்வாயோ
உதடுகளோ இனிமை பேசும்
ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
எந்தன் இயேசு உண்மை தேவன்
உன் கண்ணீரின் வேண்டுதல்
கேட்பார் கேட்பார்

உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்
பாலைவனத்தின் தனலிலும்
மாறாதவர் அல்லவோ
மரணத்தின் படுக்கையை மாற்றி
புது வாழ்வும் எனக்கு ஈந்தீர்
உயரங்களில் சாட்சியாக்கும்
தம் அற்புதமாம் வல்ல
கரங்கள் கரங்கள்

Kandaenae um thooya anbai
Adhil kalangam illaiyae
Kaetaenae um anbin kuralai
Ullam norungina naerathil

Panaththin balathaal saernthidum
Un nanbargal uruvaakum kuzhigalil
Oru naalil nee veezhvaayoa
Udhadugalao inimai paesum
Aanaal adharkkul vishamum saerum
Endhan yaesu unmai dhaevan
Un kanneerin vaenduthal
Kaetpaar kaetpaar

Udaindha manadhin thuyarangalai aribavar
Paalaivanathil thanalilum
Maaraadhavar allavoa
Maranathin padukaiyai maatri
Pudhu vaazhvu enakku eendheer
Uyarangalil saatchiyaakkum
Tham arpudhamaam Valla
Karangal karangal

Yesuve Vazhi Sathyam Jeevan – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

Yesuve Vazhi Sathyam Jeevan
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன்

1. புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்
கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே

2. நல் மேய்ப்பனாக காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்
மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அழைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார் – இயேசுவே

3. உனக்காகத் தானே பிறந்தார்
உனக்காகத் தானே வளர்ந்தார்
உனக்காகத் தானே மரித்தார்
உனக்காகத் தானே உயிர்த்தார்
இன்றும் என்றும் நமக்காய்
அவர் ராஜாவாக இருப்பார்
மார்பில் என்றும் அணைப்பார்
தூக்கி உன்னை சுமப்பார் – இயேசுவே

Karthane Em Thunaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர்

Karthane Em Thunaiyaaneer
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

Karthane Em Thunaiyaaneer
Nithamum Em Nilalaaneer
Karthanae Em Thunaiyaaneer

1. Ethanai Idar Vanthu Sernthaalum
Karthanae Adaikala Maayinaar (2)
Manumakalil Ivar Polundoo
Vin Ulakillum Ivar Siranthavar – Karthanae

2. Paavi Endennai Palar Thallinaar
Aavi Illai Endikalthum Vittar (2)
Raajaa Um Anbu Ennai Kandathu
Ummaipool Aiyaa, Engum Kandathillai – Karthanae

3. Sutrathaarum Kaalathil Kulirnthitaar
Nambinorum Ethiraaga Vanthitaar (2)
Kolkai Kooriyae Palar Pirinthitaar
Aiyaa, Ummaipool Naan Engum Kandathillai – Karthanae

4. Aayiram Naavukal Neer Thanthaalum
Raajanae, Umai Paadakoodumo (2)
Jeevanae Umakalikindrenae
Ummaipool Aiyaa, Engum Kandathillai – Karthanae

Anandha Kalippulla – ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

Anandha Kalippulla
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் – 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்

1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் – 2
உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த

2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுடன் – 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் – 2
வல்லமை காண்கிறேன் – ஆனந்த

3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் – 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா – 2
வலக்கரம் தாங்குதையா – ஆனந்த

Aanandha Kalippulla Udhadugalaal
Pottri Pugazhgindren }-(2)
Arusuvai Unavu Unbadhupol
Thirupthi Adaigindrean }-(2)
Dhinamum Thuthikkraen
Aanandha Kalippulla Udhadugalaal
Pottri Pugazhgindren }-(2)

1. Melanadhu Um Paeranbu
Uyirinum Melanadhu }-2
Udhadugal Thuthikkattum
Uyirulla Naalellaam }-2
Uyirulla Naalellaam
Aanandha Kalippulla Udhadugalaal
Pottri Pugazhgindren

2. Devane Neer En Devan
Theduvaen Aarvamudan }-2
Magimai Vanjikkiraen
Vallamai Kaangindraen }-2
Vallamai Kaangindraen
Aanandha Kalippulla Udhadugalaal
Pottri Pugazhgindren

3. Neerthanae En Thunaiyaneer
Um Nizhalil Kalikooruvaen }-2
Urudhiyaai Pattrikkondaen
Um Valakkaram Thangudhaiya }-2
Valakkaram Thangudhaiya

Sarva Srishtikkum Yejamaan Neere – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

Sarva Srishtikkum Yejamaan Neere
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணீந்து தொழுவோம்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறா
இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைய்ப்பான்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே –

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

Anaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே

Anaadhi Devan Un Adaikalame
அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்

காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே

கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்

வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்

Thuthi Geethame Padiye – துதி கீதமே பாடியே

Thuthi Geethame Padiye

வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்

1. தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்

2. காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்

3. பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்

4. கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்

5. வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்

Kirubai Poorinthenai – கிருபை புரிந்தெனை ஆள்

Kirubai Poorinthenai
கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை புரிந்தெனை

2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிருபை புரிந்தெனை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை புரிந்தெனை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை புரிந்தெனை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை புரிந்தெனை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை புரிந்தெனை

Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை

Unnathar Neere Maatchimai
உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2

உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு
கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே

1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே
நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி

2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2
வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே
உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2 – உந்தன் துதி பாடி

Kartharin Panthiyil Vaa – கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?

பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?

தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ

தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு

பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு

சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்

தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே

துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே

இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு

ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்