Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

Nambikkayum Neer Thane
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே

நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம்

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
பஞ்சம் பட்டினியே வந்தாலும்
வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *