All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Veru Oru Aasai – வேறு ஒரு ஆசை இல்ல

Veru Oru Aasai
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
2. இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
3. மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்

Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை

Kadanthu Vantha Pathai
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

Sarva Vallavar – சர்வ வல்லவர்

Sarva Vallavar
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)
ஆ…இது அதிசயம் தானே
ஓ…இது உண்மைதானே

1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்

Sarva Vallavar En Sonthamaanaar
Saavai Vendravar En Jeevanaanaar

Aa… Ithu Athisayam Thaanae
O…… Ithu Unmai Thaanae

1. Kandu Kondaen Oru Puthaiyal
Pettu Kondaen Oru Pokkisham
Yesuthaan En Iratchakar
Yesuthaan En Raajaa

2. Santhoshamum Samaathaanamum
En Ullathil Ponguthammaa
Paavamellaam Pokkivittar
Payangalellaam Neekivittar

3. Paralokathil Enathu Peyar
Eluthivittar En Yesu
En Vaalvin Nookamellaam
Yesuvukkaai Vaalvathu Thaan

4. Oorellaam Solliduvaen
Ulakamengum Paraisaatruven
Jeevikiraar En Yesu
Seekkiramaai Vanthiduvaar

Thuya Aviye – தூய ஆவியே

Thuya Aviye
தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத்தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Yakobe Nee – யாக்கோபே நீ வேரூன்றுவாய்

Yakobe Nee
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த

என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்

1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
2. அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ – நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்
4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
5. மேடுகளை பிளந்து ஆறுகள் தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
6. நானே உங்கள் தேவன் நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்

Enathu Manavalane – எனது மணவாளனே

Enathu Manavalane

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன்
நான் உம்மைத் தான் நேசிக்கிறேன்
[நான் உம்மோடு தான் இருப்பேன்]

1. உம் நாமம் சொல்லச் சொல்ல
என் உள்ளமெல்லாம் துள்ளுதையா – 2
உம் அன்பைப் பாடப் பாட – 2
இதயமெல்லாம் இனிக்குதையா – என் – 2

2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே – 2
உம் பாதம் அமரணுமே – 2
உம் சித்தம் அறியணுமே – நான் – 2

3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
என் இதய எண்ணமெல்லாம் – 2
உதந்தனவாய் இருப்பதாக – உமக்கு – 2

4. அழகெல்லாம் அற்றுப் போகும்
உலக எழிலெல்லாம் ஏமாற்றும் – 2
உம் அன்பு மாறாதையா – 2
ஒரு நாளும் அழியாதையா – அது – 2

5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
நான் நடக்கும் பாதையெல்லாம் – 2
உதந்தனவாய் இருப்பதாக – உமக்கு – 2

Enathu Manavaalane En Idhaya Yekkame
Iniyavare Yesaiyaa
Ummai Thaan Thedukiren
Naan Ummai Thaan Nesikkiren
[Naan Ummodu Thaan Iruppen]

1. Um Naamam Solla Solla
En Ullamellaam Thulluthaiyyaa – 2
Um Anbai Paada Paada – 2
Idhayamellaam Inikkuthaiyaa – En – 2

2. Um Mugam Paarkkanume
Um Azhagai Rasikkanume – 2
Um Paatham Amaranume – 2
Um Siththam Ariyanume – Naan – 2

3. En Vaayin Sorkkalellaam
Yettranavaai Iruppathaaga – 2
En Idhaya Ennamellaam – 2
Uganthanavaai Iruppathaaga – Umakku – 2

4. Azhagellaam Attru Pogum
Ula Ezhilellaam Yemaattrum – 2
Um Anbu Maaraathaiyaa – 2
Oru Naalum Azhiyaathaiyaa – Adhu – 2

5. Naan Paarkkum Paaivaiyellaam
Yettranavaai Iruppathaaga – 2
Naan Nadakkum Paathaiyellaam – 2
Uganthanavaai Iruppathaaga – Umakku – 2

Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே

Yesu Neenga
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்ல
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

1. சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே

2. அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

3. தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே

5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

6. எல்லாமே எனக்கு நீங்கதானே
எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே

7. முதலும் முடிவும் நீங்கதானே
முற்றிலும் காப்பவர் நீங்கதானே

8. வழியும் சத்தியமும் நீங்கதானே
வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே

9. பாவ மன்னிப்பு நீங்கதானே
பரிசுத்த ஆவியும் நீங்கதானே

Yesu Neenga Irukaiyile
Naanga Sornthu Povathilla
Neenga Ellaame Paathukolveenga

1. Samaathaana Kaaranar Neengathaane
Sarva Vallavarum Neengathaane

2. Adhisaya Devan Neengathaane
Aalosanai Karthar Neengathaane

3. Thaayum Thagapanum Neengathaane
Thaangum Sumaithaangi Neengathaane

4. Enakku Azhakellaam Neengathaane
Enathu Aasaiyellaam Neengathaane

5. Irul Neekkum Veliccham Neengathaane
Ratchitpin Devan Neengathaane

6. Ellame Enakku Neengathaane
Enakkul Vaazhbavarum Neengathaane

7. Mudhalum Mudivum Neengathaane
Muttrilum Kaappavar Neengathaane

8. Vazhiyum Sathyamum Neengathaane
Vaazhvalikkum Vallal Neengathaane

9. Paava Mannippu Neengathaane
Parisuttha Aaviyum Neengathaane

Ummodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான்

Ummodu Irupathu Thaan
உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் -2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2
2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே
3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே
4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

Enathu Thalaivan Yesu Rajan – எனது தலைவன் இயேசுராஜன்

Enathu Thalaivan Yesu Rajan
எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் – 2

1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம் – 2
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து – 2
பரவசம் அடைவேன் – 2

2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன் – 2
நினைத்து நினைத்து துதித்து துதித்து – 2
நிம்மதி அடைவேன் – 2

3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன் – 2
தோளில் அமர்ந்து கவலை மறந்து – 2
தொடர்ந்து பயணம் செய்வேன் – 2

4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே – 2
ஆத்துமாவை தினமும் தேற்றி – 2
அணைத்துக் கொள்பவரே – 2

Enathu Thalaivan Yesuraajan
Maarbil Saaynthu Saaynthu
Magizhnthu Magizhnthiruppaen – 2

1. Idhaya Dheebam Enathu Deivam
Irakkaththin Sikaram – 2
Paarththu Paarththu Rasiththu Rusiththu – 2
Paravasam Adaiven – 2

2. Needhi Devan Vettri Vendhan
Amaithiyin Mannan – 2
Ninaiththu Ninaiththu Thuthiththu Thuthiththu – 2
Nimmathi Adaiven – 2

3. Nalla Meippan Kuralai Ketpen
Naalum Pin Thodarven – 2
Tholil Amarnthu Kavalai Maranthu – 2
Thodarnthu Payanam Seiven – 2

4. Pasumpul Meychchal Amarntha Thanneer
Azhaiththu Chelpavarae – 2
Aaththumaavai Dhinamum Thettri – 2
Annaiththu Kolbavare – 2

Paava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை

Paava Mannippin
பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்

இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்

1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை