All Songs by david

Irul Soolntha Logathil – இருள் சூழ்ந்த லோகத்தில்

Irul Soolntha Logathil
1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் – அஞ்சிடேன்

3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் – அஞ்சிடேன்

Karthar Nallavar Avar Kirubai – கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

Karthar Nallavar Avar Kirubai
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே

1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
மகிமையினால் நம்மை மூடிடுவார்

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

2. அந்நியபாஷைகள் தந்திடுவார்
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

Karthar nallavar avar kirubai endrumulladhe (2)

Paralogam thirandhidum neram
Deva magimai irangidudhe

Karthar nallavar avar kirubai endrumulladhe (2)

1. Kartharai thudhithu sthoththarithal
Parisuththa sthalathal naam koodinal
Kartharai thudhithu sthoththarithal
Parisuththa sthalathal naam koodinal
Abishegathal nammai nirappiduvar
Magimayinal nammai moodiduvar
Abishegathal nammai nirappiduvar
Magimayinal nammai moodiduvar
– Paralogam
– Karthar nallavar

2. Anniya bhashaigal thandhiduvar
Akki abishegam ootriduvar
Anniya bhashaigal thandhiduvar
Akki abishegam ootriduvar
Varangalinal nammai niraththiduvar
Aayudamaai nammai maatriduvaar
Varangalinal nammai niraththiduvar
Aayudamaai nammai maatriduvaar
– Paralogam
– Karthar
– Paralogam
– Karthar (5)

Nandri Ullam Niraivudan – நன்றி உள்ளம் நிறைவுடன்

Nandri Ullam Niraivudan
நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்

பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்

நன்றி நன்றி நன்றி

Nandri Ullam Niraivudan
Nandri parisuththarkae
Nandri dhevakumaaran yaesuvai thandhaar (2)

Belaveenan belavaan endru sollvaan
Dhariththiran sezhiththiduvaan
Dhevanin seyal idhuve
Namakaai – Nandri Nandri Nandri

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He’s given Jesus Christ, His Son.

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He’s given Jesus Christ, His Son.
And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich”
Because of what the Lord has done for us.

And now let the weak say, “I am strong”
Let the poor say, “I am rich”
Because of what the Lord has done for us.

Give thanks
Give thanks
Give thanks.

Lesana Kariyam – லேசான காரியம் உமக்கு அது

Lesana Kariyam
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 )
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )

Sarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

Sarva Srettikum Ejamaan
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.

வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா

சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா

எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா

Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

Enakkaga Yavaiyum Seidumudikkum
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும்
தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2
அவர் நல்லவராக வல்லவராக
இருப்பதினால் ஸ்தோத்திரம் – 2

நான் கூப்பிட்ட வேலைகளில்
பதில் கொடுத்தீர் ஐயா – 2
இன்னலை நீக்கிவிட்டீர்
பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர்

தாழ்மையில் இருந்த என்னை
உயர்த்தினிரே ஐஸ்ô
உந்தனின் செயல்களையே
நான் பாடியே துதித்திடுவேன்

நான் பயப்படும் நேரங்களில்
உறுதியாய் நம்பிடுவேன்
நீரே என் கோட்டை
என் இரட்சிப்புமானவர்

Azhagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Azhagai Nirkum Yaar Ivargal

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? – 2

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் (…அழகாய்)

2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் (…அழகாய்)

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் (…அழகாய்)

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் (…அழகாய்)

5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று (…அழகாய்)

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை (…அழகாய்)

7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே (…அழகாய்)

Azhagaai Nirkkum Yaar Ivargal
Thiralaai Nirkkum Yaar Ivargal
Senai Thalaivaraam Yesuvin Porttralaththil
Azhagaai Nirkkum Yaar Ivargal – 2

1. Oru Thaalandho Rendu Thaalandho
Aindhu Thaalandho Ubayogiththor
Siridhaanadho Peridhaanadho
Pettra Pani Seidhu Mudiththor (…Azhagaai)

2. Kaadu Medu Kadandhu Sendru
Karththar Anbai Pagarndhavargal
Uyarvinilum Thaazhvinilum
Vookkamaaga Jebiththavargal (…Azhagaai)

3. Thanimaiyilum Varumaiyilum
Laazaru Pondru Nindravargal
Yaasiththaalum Boshiththaalum
Visuvaasaththai Kaaththavargal (…Azhagaai)

4. Ellaa Jaathiyaar Ellaak Koththiram
Ellaa Mozhiyum Pesum Makkalaam
Siluvaiyin Keezh Yesu Raththaththaal
Seer Poraattam Seithu Mudiththor (…Azhagaai)

5. Vellai Angiyai Thariththu Kondu
Vellai Kuruththaam Olai Pidiththu
Aarpparippaar Pithaavin Munbu
Aattukkuttikke Magimaiyendru (…Azhagaai)

6. Ini Ivargal Pasi Adaiyaar
Ini Ivargal Thaagamadaiyaar
Veyilaagilum Analaagilum
Vethanaiyai Alippathillai (…Azhagaai)

7. Aattukkutty Thaan Ivar Kanneerai
Ara Agattri Thudaiththiduvaar
Azhaiththu Selvaar Inba Oottrukke
Allip Paruga Yesu Thaame (…Azhagaai)

Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal – நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)

நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க

Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே

Karthave En Belane
கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

Arpanithen Ennai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

Arpanithen Ennai Muttrilumaai
1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்