All Songs by david

Deva Um Karuniyam – தேவா உம் காருண்யம் நீக்கும் வாழ்வின் – O Lord Your tenderness

Deva Um Karuniyam
o lord your tenderness
தேவா உம் காருண்யம்
நீக்கும் வாழ்வின் கசப்பெல்லாம்
தேவா தாரும் அன்பை
தேவா உம் சவுந்தரியம்
மாற்றும் வாழ்வில் மாசெல்லாம்
தேவா தாரும் அன்பை

O Lord Your tenderness
Melting all my bitterness
O Lord I will receive
Your Love
O Lord Your loveliness
Changing all my ugliness
O Lord I will receive
Your Love

Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே

Deva Um Samugame yenathu piriyamay

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2

1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2

2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2

3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2

4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2

5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

Devanbibn Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

Devanbibn Vellamae

1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய்ம் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
அய்யா, நின் அடி பணிந்தேன்.

2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிப்
பாதையை தவறிடினும்,
கூவி விளித்தம் தன் மார்போடணைத்தன்பாய்
கோது பொறுத்த நாதா!

4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா! தற்காத்தருள்வாய்.

5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப்பீடம் படைப்பேன்!
மோச வழிதனை முற்றும் அகற்றி என்
நேசனே நினைத் தொழுவேன்.

6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
பிரித்திடுமோ தெய்வன்பை?

Devalayam Selvathu – தேவாலயம் செல்வதே மகிழ்ச்சியை

Devalayam Selvathu

தேவாலயம் செல்வதே மகிழ்ச்சியை கொடுக்கும் கர்த்தர் சமூகத்திலே
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் – 5
ஆனந்தம் ஆனந்தமே
பாடுவோம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா

Devan Arulia Solli Mudiyatha – தேவன் அருளிய சொல்லி முடியாத

Devan Arulia Solli Mudiyatha

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம்

1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்களே
இது உங்களாலே உண்டானதல்ல
தேவன் தந்த நல்ல ஈவே

2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
இது இருதயத்தின் அன்பின் ஆவியே
தேவன் தந்த நல்ல ஈவே

3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்
குறைவில்லாது நடத்துகின்றரே
நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்
தேவன் தந்த நல்ல ஈவே

4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
நன்மைகளைத் தருகின்றரே
இது தேவன் தரும் ஆசிர்வாதமே
தேவன் தந்த நல்ல ஈவே

Devanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்

Devanae Naan Umathundail

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து

3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்க் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்

Devanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே

Devanin namathirke thuthi

தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

1. தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

2. தேவனின் நாமம் பலத்த கோட்டை
நீதிமான் வாழ்வில் சுகம் அங்கே

3. பரிசுத்தர் அவர் நாமம் – 3
உன்னதரே

4. இயேசு அவர் நாமம் – 3
உன்னதரே

 

Blessed be the name
of the Lord – 3
Most high

1. Glory to the
Name of the Lord – 3
Most high

2. The Name of the Lord is a strong tower
righteous run into it they are safe

3. Holy is the Name of the Lord – 3
Most high

4.Jesus is the Name of the Lord -3
Most high

Dasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய்

Dasare Itharaniyai Anbai

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம் – உரித்தாய்
இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை
நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து – தமை
மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

4. இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய வழிக்குள்
வந்திடச் சேர்த்திடுவோம் – ஊக்கமாய்
ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

Diyaan Diyaan Dikiri Diyaan Doi – டியான் டியான் டிக்கிரி டியான் டோய்

Diyaan Diyaan Dikiri Diyaan Doi

டியான் டியான் டிக்கிரி டியான் டோய்
இயேசுப்பா எங்க Friend- டோய்
ஒரு நாளும் கைவிடமாட்டார்
ஒரு நாளும் விலகிடமாட்டார் -2
– டியான் டியான்

Diyaan diyaan dikiri diyaan doi
Yesappaa enga friend doi
Oru naalum kaividamaataar
Oru naalum vilagidamaataar – 2
– Diyaan diyaan

Thaanaana Thanthanaana – தானான தந்தனான

Thaanaana Thanthanaana

தானான தந்தனான
தானான தந்தனான -2
பாட்டு பாடுவோம் இயேசு கிறிஸ்துவின்
ஒன்று கூடி உயர்த்திடுவோம்
ஓடி வருவார் நீ கூப்பிடும் போது – 2
ஆசிர்வதிப்பார் நீ ஜெபிக்கும் போது – 2
-போடு தானான

Thaanaana thanthanaana
Thaanaana thanthanaana – 2
Paatu paaduvom Yesu Kiristhuvin
Ondru koodi uyarthiduvom
Oodi varuvaar nee koopidum pothu – 2
Aasirvathipaar nee jebikkum pothu – 2
– podu thaanaana