Song Category: Tamil

Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே

Thodum Yen Kangalaiye
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

1. தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே – இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே – இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

3. தொடும் என் கைகளையே
உம் பணி செய்ய வேண்டுமே – இயேசுவே – 2

4. தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே – இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

5. தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே – இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

6. தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக வேண்டுமே – இயேசுவே – 2

7. தொடும் என் இருதயத்தையே
உம் அன்பு பெருக வேண்டுமே – இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே

Sthothiram Sthothiram – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Sthothiram Sthothiram

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே

1. கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானிக்க
ஸ்தோத்திரம் இயேசு நாதா
குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர்

2. திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர்

3. விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்திடும் உம் தழும்புகளால்
திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர்

4. உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
எம்மாத்திரம் என் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்

Sthothiram Sthothiram
Sthothiram Sthothiram Yesuve

1. Karthar Seitha Nanmaigalai
Ninaithu Thiyanika
Sthothiram Yesu natha
Kudumbamaka panikirom -..Karthar

2. Thikaiyathe endravare
Thikaikum pothu kathavare
KJalangkathe endravare
Kalangkum pothu kathavare -..Karthar

3. Viduvippen endravare
Viyathiyin nerathil katthavare
Viduvithidum um thalumbukala
Thiruratthathal ennai kathavare -..Karthar

4. Um kirubai pothumendren
Emmanuvelanai vanthavare
Yemmathiram en kudumbam
Unthan kirubayai ninaithitdaal -..Karthar

Visuvasiyin Kathil Pada – விசுவாசியின் காதில் பட

Visuvasiyin Kathil Pada
விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே – விசுவாசியின்

2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும் – விசுவாசியின்

3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் – விசுவாசியின்

4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே – விசுவாசியின்

5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே – விசுவாசியின்

Visuvaasiyin kaadhil pada yaesuvendra naamam
Viruppaayavar seviyil dhoni inippaakudhu paasam

1. Pasitha aathumaavai pasiyaatru mannaavadhuvae
Musippaarudhal ilaithoarkkellaam muttum andha peyarae – Visuvaasiyin

2. Thuyaraiyadhu neekki kaayamaatri gunappaduthum
Bayangal yaavum yaesuvendraal parandhoadiyae poagum – Visuvaasiyin

3. Kaayappatta irudhayathai kazhuvi suthappaduthum
Maayaikonda nenjaiyadhu mayakkaminrividukkum – Visuvaasiyin

4. Ellai illaa kirubaithiral aetru niraindhirukkum
Ellaa naalum maaraaselvam yaesuvendra peyarae – Visuvaasiyin

5. Ennaandavaa en jeevanae en maarkkamae mudivae
Ennaal varunthudhiyai neerae aetrukkollum dhaevae – Visuvaasiyin

Vidudhalai Thaarumae – விடுதலை தாருமே

Vidudhalai Thaarumae En Aandavaa
விடுதலை தாருமே என் ஆண்டவா
வினை தீர்க்கும் விண்ணரசா

1. நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா

2. ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ

3. யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா

Vidudhalai Thaarumae En Aandavaa
Vinai theerkum vinnarasaa

1. Nitham nitham kanneerinaal
Nithiraiyai tholaithaenaiyaa
Nindhai theerka vaarumaiyaa

2. Aarudhalin dheivam neeray
Thaetruveeray um vaarthaiyaal
Jeeva vaarthai neerallavo

3. Yaarum illai kaapaatrida
Tholil saaythu enai thaetrida
Nilai maatra vaarumaiyaa

Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர்

Naanum Oru Computer
நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார் (2)
நாளும் அவர் கட்டளையாலே
நன்றாய் இயங்குகிறேன் (2)

ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

எந்தன் வைரஸ் எல்லாம்
வசனத்தாலே சாகும்
எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
இயேசுவைத் தேடும் (2)

கீபோர்ட் அவர் கையில்
மௌஸும் அவர் கையில்
அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
அவர் அழகை காட்டிடுமே

நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார்

ந…நா…ந ந நா…..

Naanum oru computer
Ennai dhaevan undaakkinaar (2)
Naalum avar kattalaiyaalae
Nanraai iyangugiraen (2)

I am a super computer
And Jesus my master operator

Endhan virus ellaam
Vasanathaalea saagum
Endhan hard disc eppoadhum
Yaesuvai thaedum (2)

Keyboard avar kaiyil
Mouse um avar kaiyil
avar thatta thatta desktop
avar azhagai kaattidumae

Naanum oru computer
Ennai dhaevan undaakkinaar
Na…naa…na na naa…..

Naan Oru Paavi – நான் ஒரு பாவி

Naan Oru Paavi Naan Oru Paavi

நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்

1. பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன்
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்

2. சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் – என்னை
இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்
குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
என்னில் நல்லதோர் குணமுமில்லை

3. எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் – ஒரு
கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா – ஐயோ
எனக்கு மன்னிப்பு உண்டா

4. மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்

5. புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்

Naan Oru Paavi Naan Oru Paavi
Naan seidha paavangal pallaayiram
Naan oru paavi Naan oru paavi
Naa seidha paavathukku naan kaaranam

1. Paavathil paavathil naan vizhundhuvitaen
Ennai naan ennai naan veruthu vitaen
Umadhu aalosanai baaram endrayn
Ummai naan thallivittu dhooram sendrayn

2. Sandharpangal endrum soolnilaigal endrum
Paavam seidha pinnaalay pazhi sumaththi
Thoondi vittaar endrum maatrivittaar endrum
Matravarai ennaalum kutrapaduthi
Naan seidha paavathukku nyaayangal sonnayn
Ennai ratchitha dhevanidam kaaram sonnayn
Kutrangal oppukkollum manamumilai – ennil
Nalladhor gunamum illai

3. Ennagalukkullay ekkachakka paavam
Vesham poettu thirivadhaal therivadhillai
Sollil oru vaazhkai sollaamal oru vaalzhai
Matravargal endhan nilai arivadhillai
Kattalai meerugindren anudhinamum – oru
Kallai poel maarinadhu endhan manamum
Ennai pol paavi indha ulagil undaa – ayyo
Enakku mannippu undaa

4. Mannikka thaanay mannukku vandhaen
Mandraadum unnai en maganaakinayn
Mannikka thaanay mannukku vandhaen
Mandraadum unnai en magalaakinayn

5. Pudhiya idhayathai koduthiduvaen
Paavangal neenga unnai kazhuviduvaen
Enadhu aaviyinaal nirappiduvaen
Unnai naan ennodu saerthukolvaen

Ulagai Ratchippavarae – உலகை இரட்சிப்பவரே

Ulagai Ratchippavarae
உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

1. காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே

2. எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

Ulagai Ratchippavarae
Unnadha dheivam neeray
Uyarndha adaikkalamae – neer
Uyirin uraividamae

1. Kaalangal thodangidum mun kartharaai irundhavaray
Boomiyai suzhalacholli kattalai koduthavaray
Vaanathai virippadhum ishtampola madippadhum
Umakku kadinamillai
Minnalai kaigalukkul moodivaithu nadakkireer
Umakku nigarumillai yae
Ummida anumadhi kaettae anuvum asaigindrathae
Anda saraasaram yaavum umakkul adangiduthae

2. Engalai kristhuvukkullay therindhukondavarum neer
Ratchippin thittangal ellaam munnaray arindhirundheer
Kristhuvai engalukkaai saabamaaga maatriyadhu
Anbinai arivikkaththaan
Andraadam vetripera parisutha aavi undu
Paeranbai niroobikkath thaanay
Umadhu magimaikku thaanay Engalai padaithuvitteer
Engalai magimai saerka anbudan azhaithuvitteer

Salamen Raja – Dhevaadhi Dhevanaamae – சாலேம் ராஜா சாரோன்

Dhevaadhi Dhevanaamae
சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்

2. பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாததுந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்

3. பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே

4. நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்

5. கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எமை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்

Saalem raja saaron roja pallathaakin leele neer
Singaasanam veetrirukkum yoodha raja singam neer

1. Dhevaadhi dhevanaamae
Raajaadhi raaajanaamay
Ennullathil vaarumay
Amen amen amen

2. Saalem raja saaron roja
Pallathaakin leele neer
Singaasanam veetrirukkum
Yoodha raja singam neer

3. Peraanandham um prasannam
Maaraadhadhundhan vasanam
Kaeroobeengal um vaaganam
Um sareeramay en boejanam

4. Neer paesinaal adhu vedham
Um vaarthaiyae prasaadham
Um valla seyalgal pramaadham
Podhum podhum neer podhum

5. Kannoeki emmai paarum
Theemai vilakki emmai kaarum
Indray em pandhiyil saerum
Vaarum neer viraivil vaarum

Muthirai Muthirai Yezhu Muthirai – முத்திரை முத்திரை ஏழு முத்திரை

Muthirai Muthirai Yezhu Muthirai

முத்திரை முத்திரை ஏழு முத்திரை
இவைகளை திறப்பது யாரது
இயேசு கிறிஸ்து தானது

1. வெள்ளை குதிரையில் ஒருவன்
அந்தி கிறிஸ்து அவன்
ஜெயிக்க வரும் ஒருவன்
ஜனங்களை வஞ்சிப்பவன்
போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும்
வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும்

இது முத்திரை முதல் முத்திரை

2. சிவப்பு குதிரையில் ஒருவன்
அதிகாரம் கொண்டவன்
பட்டயம் கையில் கொண்டவன்
பலரை கொல்லும் ஒருவன்
யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்
இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்

இந்த முத்திரை இரண்டாவது

3. கறுப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான்
தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான்
பூமி எங்கும் பஞ்சம் உண்டாகும்
பட்டினியாலே துன்பம் உண்டாகும்

இந்த முத்திரை மூன்றாவது

4. நாலாம் முத்திரை உடைத்தபோது மங்கின நிறமுள்ள குதிரை
மரணம் என்பது அவனது நாமம்
மேற்கொள்ளுமே பலரை
பஞ்சத்தாலும், போரினாலும், பூமி அதிர்ந்ததாலும்,
கொள்ளை நோயின் பிடியினாலும் மரணம் மேற்கொள்ளும்
மனிதனை மரணம் மேற்கொள்ளும்

முத்திரை முத்திரை ஏழு முத்திரை

5. ஐந்தாம் முத்திரை உடைத்தபோது
பலிபீடத்தின் கீழே
ரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
விண்ணப்பம் சென்றது மேலே
தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
உலகம் பகைத்திடும்
கர்த்தரே தேவன் என்று போற்றினால்
கொலையும் செய்திடும்

6. ஆறாம் முத்திரை உடைத்தபோது பூமியும் அதிர்ந்ததே
சூரியன் கறுத்து சந்திரன் சிவந்து
விண்மீண் விழுந்ததே

மனுஷ குமாரனின் அடையாளங்கள் விண்ணில் தெரியுது பார்
மன்னாதி மன்னன் வருவதை பார்த்து மனிதர் புலம்பிடுவார் – பூமியின் மனிதர் புலம்பிடுவார்

7. இறுதி முத்திரை உடைந்தது
பரலோகில் அமைதி நிலவியது
பூமியின் நியாயத்தீர்ப்புக்காய்
ஆயத்தமாகும் ஒரு அமைதியது

Muthirai Muthirai Yezhu Muthirai
Ivaigalai thirappadhu yaaradhu
Yesu kiristhu thaanadhu

1. Vellai gudhiraiyil oruvan
Andhi krishu avan
Jeyikka varum oruvan
Janangalai vanjippavan
Poliyaai palar vandhu poevaar
Echarikkai vaendum
Vaedham solvadhai nangu ariya vaendum

Idhu muthirai mudhal muthirai

2. Sivappu gudhiraiyil oruvan
Adhigaaram kondavan
Pattayam kaiyil kondavan
Palarai kollum oruvan
Yuththa seidhigal kaetkumbodhu echarikkai vaendum
Ivaigalellaam sambavikka vaendum

Indha muthirai irandaavadhu

3. Karuppu gudhiraiyil savaari seidhu oruvan varugindraan
Tharaasai kaiyil yaendhi kondu avanay varugindraan
Boomi engrum panjam undaagum
Pattiniyaalay thunbam undaagum

Indha muthirai moondraavadhu

4. Naalaam muthirai udaitha podhu
Mangina niramulla guthirai
Maranam enbadhu avanadhu naamam
Maerkollumae palarai
Panjathaalum poerinaalum boomi adhirndhadhaalum
Kollai noeyin pidiyinaalum maranam maerkollum
Manidhanai maranam maerkollum

5. Aindhaam muthirai udaithapodhu balibeedathil keezhae
Ratha saatchiyaai maanda maandharin
Vinnappam sendradhu maelay
Dhevanai thozhudhidum aathumaakkalai
Ulagam pagaithidum
Kartharay dhevan endru poetrinaal
Kolaiyum seidhudum

6. Aaraam muthirai udaithapodhu boomiyum adhirndhadhae
Sooriyan karuthu sandhiran sivandhu vinmeen vizhundhadhae

7. Manusha kumaaranin adaiyaalangal vinnil theriyudhu paar
Mannadhi mannan varuvadhai paarthu manidhar pulambiduvaar

Irudhi muthirai udaindhadhu paralogil amaidhi nilaviyadhu
Boomiyin nyaaya theerpukkaai aayathamaagum oru amaidhiyadhu

Vaarthaiyai Anuppiyae – வார்த்தையை அனுப்பியே

Vaarthaiyai Anuppiyae

வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா

1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

Vaarthaiyai Anuppiyae en vaadhaiyai poekkumae
En vaedhanai umakku purigindradhaa
En vaendudhal ummai adaigindradhaa
En soegangal en kaayangal
Um kaaladi varugindradhaa

1. Vaarthaiayi anuppuvaen un vaadhaiyai poekkuvaen
Un vaedhanai enakku purigindradhae
Un vaendudhal ennai adaigindradhae
Un soegangal un kaayangal
Naan siluvaiyil sumandhu vittaen
En pillai endraal sitchikkirayn
Unnai sitchithapin ratchikkirayn