Song Category: Tamil

Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு

Magimaiyin Raja Magimaiyodu

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்

ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே

1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூரணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

Magimaiyin Raajaa Magimaiyodu
Varukindraar Megameethil

Aa..Aa.. Aanandhame Aanandhame
Aanandhame Peraanandhame

1. Boomi Adhisayikka Vaanor Aarpparikka
Thoothar Thoniyudane Megameethil Varuvaar
Anbargal Naangal Yesuvai Santhippom
Aanandham Aanandhame (…Magimaiyin)

2. Aasai Magibanavar Pithaavin Magimaiyodu
Nesa Manavaattiyai Maruroobamaakka Varuvaar
Aavalaai Naamum Yesuvai Santhippom
Aanandham Aanandhame (…Magimaiyin)

3. Suththa Pragaasamaaga Siththira Thaiyalaadai
Thooya Neethiyudane Venvasthiram Tharippom
Vinnavar Saayalil Yesuvai Santhippom
Aanandham Aanandhame (…Magimaiyin)

4. Aaviyil Manavaattiyum Azhaiththidum Neramallo
Aayaththa Vizhippudane Pooranamadainthiduvom
Kaalamum Sendrathu Neramum Vanthathu
Aanandham Aanandhame (…Magimaiyin)

 

Yaakoba Pola Naan – யாக்கோபைப் போல நான்

Yaakoba Pola Naan

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
நான் விட மாட்டேன்

1.  அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

2. கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா

3. தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

Unga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா

Unga Vasanam

உங்க வசனம் மனமகிழ்ச்சியா
இல்லாமல் போனா என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்

பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ

மரண இருளில் நடக்கினற போது-கோலும்
தடியுமாக தேற்றுதையா உம் வசனம்
துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது
உயிர்பித்து உயர்த்துதையா
உம் வசனம் தானையா

உமது வேதத்தை இரவும் பகலும்
தியானம் செய்வதினால்
பாக்கியமாய் உயர்த்துதையா
பச்சையான மரமாக இலை உதிராமல்
காலமெல்லாம் கனிகொடுத்து
உயர்த்துதையா உம் வசனம்

உமது வசனம் உட்கொள்ளும்போது
இதயம் அனலாகி கொழுந்து
விட்டு எரியுதையா
உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து
எழும்புதையா-சேனையாய் எழும்பி
நின்று சத்துருவை துரத்துதையா

Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே

Yellam Um Kirubaiye

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே

நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை

Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

Seitrilirunthu Thuki Yeduthar

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்

பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்

என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
ஆலேலுயா நான் சுத்தமானேன்

Enthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

Enthan Aathumave Kartharaiye

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்

நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்

மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

Vali Thirapaare Devan – வழி திறப்பாரே தேவன்

Vali Thirapaare Devan

வழி திறப்பாரே
தேவன் வழி திறப்பாரே
நான் அறிந்திராத வழிகளில்
எனக்காக புது பாதைகள்
என்றும் நடத்திடுவார்
நம்மை அனைத்து காத்திடுவார்
நாள் தோறும் என்னை தெற்றியே
நடத்துவார் நம்மை, வழி திறப்பாரே

வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரே
வறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்
இப்புவி ஒழிந்தாலும்
தேவ வார்த்தை அழியாதே
புதியதோர் காரியம் செய்வார்

Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்

Um Setaigalin Kel

உம் செட்டைகளின் கீழ்
மறைத்திடுமே
உம் கரங்களால்
எனை மறைத்திடுமே

கடல் கொந்தளித்தெழுந்தாலும்
புயல்களை நான் மேற்கொள்வேனே
ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
அமர்ந்திருது நீர் தேவன் என்பேன் – 2

ஆத்துமாவே
இளைப்பாறிடு
அமர்ந்திருந்து
அவர் வல்லமை உணர்ந்திடு

Enthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை

Enthan Meipare

எந்தன் மேய்ப்பரே
என்னை ஆண்டு நடத்துமே
நீர் நடத்தும் இடமெல்லாம்
பின் சென்றிடுவேன்
உம் சத்தம் கேட்கவே
செவிசாய்த்திடுவேனே
நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்

பசுமையான மேய்ச்சலண்டை
அமர்ந்த தண்ணீர்கள்
என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
தடைகள் மலையைப்போல நின்று
பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்

Yaarum Illai Rajah – யாரும் இல்லை ராஜா

Yaarum Illai Rajah

யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா

உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்
நீர் தொட்டால் சுகம் உண்டு
உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு
உம்மை போல் யாருண்டு

யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா