Song Category: Tamil

Ummai Pola Yaarum Illaye – உம்மை போல யாரும் இல்லையே

Ummai Pola Yaarum Illaye

உம்மை போல
யாரும் இல்லையே இயேசு ராஜா
வான தூதர்கள்
துதி முழங்க
நாமும் சேர்ந்து உயர்த்திடுவோம்

பாடுவேன் ஓசன்னா
சர்வ வல்ல மாராஜனிவர்
உமக்கே மகிமை உண்டாகட்டும்
அப்பா உம் நாமம் உயர்த்திடுவேன்

என் நேசரே
எண்ணில் எத்தனை அன்பு கூர்ந்தீர்
எந்தன் பாவத்தை நீக்கிடவே
உம்மை பலியாக ஈந்தீரய்யா

Kartharin Satham Vallamai Ulladhu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

Kartharin Satham Vallamai Ulladhu
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

1. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்

2. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்

3. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதான மீந்து
பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

Yesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட

Yesuvin Anbinai Arivithida
இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம் (2)

நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே (2)

நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2
தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம்

காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2
இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்

Aaradhanai Aaradhanai Aaradhanai – ஆராதனை ஆராதனை ஆராதனை

Aaradhanai Aaradhanai
ஆராதனை (ங) ஆராதனை (க)
ஆராதனை (ங) ஆராதனை (க)
ஆராதனை (ங) ஆராதனை (க)
ஆராதனை செய்வோமே அல்லேலூயா (4)
1. ஆராதனை செய்வோமே!
உன்னத தேவனுக்கே!
2. ஆராதனை செய்வோமே!
உத்தமர் இயேசுவுக்கே!
3. ஆராதனை செய்வோமே!
அக்கினியானவர்க்கே!
4. ஆராதனை செய்வோமே!
ஆருயிர் தேவனுக்கே!
5. ஆராதனை செய்வோமே!
அபிஷேக நாதனுக்கே! – ஆராதனை

1. ஆராதனை செய்வோமே!
மாட்சிமை தேவனுக்கே!
2. ஆராதனை செய்வோமே!
மன்னாதி மன்னனுக்கே!
3. ஆராதனை செய்வோமே!
பரிசுத்த தேவனுக்கே!
4. ஆராதனை செய்வோமே!
ராஜாதி ராஜனுக்கே!
5. தேவாதி தேவனுக்கே
உயிருள்ள நாளெல்லாமே! – ஆராதனை (5)
அல்லேலூயா (4)

Mayaiyana Intha Ulaginile – மாயையான இந்த உலகினிலே

Mayaiyana Intha Ulaginile
மாயையான இந்த உலகினிலே
பாவியான என்னைத் தேடி வந்தீரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
நிலையில்லாத இந்த உலகினிலே
கால்களை உறுதியாக்கினீரே
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
எங்கே செல்வேன்

தேனிலும் இனிமையானவரே
பாடலில் ராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே நாங்கள் பாடவே

எளிமையான எந்தன் வாழ்வினிலே
மகிமையைத் தந்த மகத்துவரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
செம்மையான வழியில் நடத்துகிறீர்
உம்மைவிட்டு நானும் எங்கே
செல்வேன் செல்வேன்
நீர் இல்லா வாழ்க்கை
வாழ்க்கையே இல்லை
அங்கும் இங்கும் அலைந்தபோதும்
நிம்மதி இல்ல
உம்மையே நானும் பற்றிடுவேனே
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்பிடுவேனே

Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி

Andavar Yesuvin
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி

2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி

Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்

Karthar Periyavar
கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1

1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே! – சர்வ

2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ

3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர் – சர்வ

Megangalil Aaravarathodu – மேகங்களில் ஆரவாரத்தோடு

Megangalil Aaravarathodu

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்

கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்

மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை

Unnil Narkiriyai

உன்னில் நற்கிரியை தொடங்கினவர்
உன்னை இறுதிவரை நடத்திடுவார்
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-3

1. சோதனை, வேதனைகள், வரட்டுமே!
சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

2. சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!
சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

3. சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!
யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

Ulaga Gana Magimai Yellam – உலக கன மகிமை எல்லாம்

Ulaga Gana Magimai Yellam
உலக கன மகிமை எல்லாம்
துதி கன மகிமை எல்லாம்
இயேசு உமக்கே தானே!
என்றென்றும் துதித்திடுவேன்-2
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் மகத்துவமானவர்-2
இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை

1. உம் கண்களின் வெளிச்சம்
சூரிய ஒளியைப் போல்
என்றென்றும் ஜொலித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா

2. உம் பாதங்கள் வெண்கலம்
உந்தன் குரல் பெருவெள்ளம்போல்
எங்கெங்கும் தொனித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா