Song Tags: Parigaari

Nanmaigal Seithu – Nanmaigal – நன்மைகள் செய்து நலிந்துபோன நண்பனே!

Nanmaigal Seithu
நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -2

1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

Nanmaikal Seidhu Nalindhu Pona Nanbanae…(Maganae…/Magalae…)
Nanmaiyin Naayagar Yesu Unnai Miga Naesikiraar – (2)
Nee Soernthuvidaadhae – Manam
Thalarndhu Pokaadhae…

1. Nesithavar Unackethiraai Pesinaroe…
Nanmai Petravar Undhan Mudhukil Kutthinaroe…
Pettra PillaigaL Unnai Verutthu Thallinaroe… – Nee (2)
Valartthu Vittavar Undhan Maarbil Paainthanaroh.. – Nee (2)
Unnai Kaattilum Miga Athiga PaadugaL -2
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Ninthaikalai
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Avamaanam
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..Dhrogangal
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..

2. Voozhiyatthin Paathaiyilae Vaethanaiyoh..
Sumanthida Mudiyaadha BaarangaLoh… (2)
KaNNeerum Iratthamaagi Poenadhuvoh – Un (2)
Yaen Marandheer Yendru Katharum Soozhlnilaiyow – Deva(2)
Unai Kaatilum Miga Adhika Paadugal – 2
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Vaethanai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Soedhanai
Anubavithavar Yesu Enbathai Maravaadhae…KaNNeerai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae

Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen
கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்