Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen
கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *