Song Tags: Pr. Vasanth Samson Song Lyrics

Neerallal Ivullaginille – நீரல்லால் இவ்வுலகினிலே

Neerallal Ivullaginille

நீரல்லால் இவ்வுலகினிலே
சொந்தமாய் நான் வாழ்ந்திடேனே உம்மையன்றி சார்ந்திடவே மேன்மையேதும் இங்கில்லையே

1. அழைத்தீரே உந்தனுக்காய்
தாயின் கருவினில் தோன்றுமுன்னே
புது நாமத்தை எனக்களித்து
உமதாவியால் நடத்துகிறீர்

2. சிலுவையில் தொங்கினீரே
பாவ ரோகத்தை அகற்றிடவே
எனக்காக நீர் உயிர் கொடுத்தீர்
உமக்காக நான் உயிர் வாழ்ந்திட

3. கிலேசங்கள் சூழும்போது
நேச அனல் என்னை அணைத்திடுமே
அந்த நிறைவான ஆறுதலை
நித்தம் வாஞ்சித்து ஏங்குகிறேன்

4. ஆத்தும நங்கூரமாய்
என்னோடென்றும் இருப்பவரே
திசை மாறாமல் என் படகை
கரை சேர்ப்பீரே எனதாண்டவா!

Vallamaiudaiyavar Magimaiyaanathai – வல்லமையுடையவர் மகிமையானதை

Vallamaiudaiyavar Magimaiyaanathai
வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !
நேற்றும் இன்றும் மாறவில்லையே,
என்றும் மாறிடார் -2

தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் !

1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே
எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே
செயல்களில் மகத்துவமானவரே
கிருபையாய் என் முன் செல்வாரே.

2. சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார்
நிச்சயம் முடிவு எனக்கு உண்டு
பரவச பாக்கியம் அடைந்திடுவேன் !!

3. தேவனின் நகரம் எனக்கு உண்டு
ஆயத்தமாகி காத்திருப்பேன்
பாடுகள் சகித்து வாழ்ந்திடுவேன்
மகிமையின் மகுடம் சூட்டிடுவார் !!

4.தேவனால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உயர்ந்த மதிலையும் தாண்டிடுவேன்
தடைகளை தகர்த்து எறிந்திடுவேன்
சோதனை ஜெயித்து வாழ்ந்திடுவேன் !!