Abishekam Seithidum – அபிஷேகம் செய்திடும்

Abishekam Seithidu
அபிஷேகம் செய்திடும்
அபிஷேக தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
பரிசுத்த தைலத்தால்

வேறொரு இதயம் தாருமே எனக்கு
உமக்காய் அடையாளமாய் நிற்பேன்
தேவனின் ஆவியே தங்கிடும் எனக்குள்
உமக்காய் அனலாக செயல்படுவேன்

அபிஷேக தைலமே
என்னை நிரப்பிடுதே

பூரண ஆனந்தம் தாருமே எனக்கு
நாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்
துயரங்கள் யாவும் நீக்கிடும் எனக்குள்
நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே

ஆனந்த தைலமே
என்னை நிரப்பிடுதே

பரிசுத்த ஜீவியம் தாருமே எனக்கு
ஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமே
ஆவியின் வரங்கள் தாருமே எனக்கு
உந்தனின் ஊழியம் செய்திடுவேன்

பரிசுத்த தைலமே
என்னை நிரப்பிடுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *