All Songs by david

Sthothiram Yesu Natha – ஸ்தோத்திரம் இயேசுநாதா

Sthothiram Yesu Natha
ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்

1. வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப்பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு

2. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

3. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்

4. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

5. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே

Sthothiram Yesu Natha
Umakkendrum sthoathiram yaesu naadhaa
Sthoathiram seigiroam ninnadiyaar
Thiru naamathin aadharavil

1. Vaana thoodhar saenaigal
Manoagara keedhangalaal eppoadhum
Oayvindri paadi thudhikka maaperum
Mannavanea umakku

2. Itthanai magathuvamulla
Padhavi ivveazhaigal engalukku
Ethanai maadhayavu nin kirubai
Ethanai aachariyam

3. Nin udhiramadhinaal
Thirandha nin jeeva pudhu vazhiyaam
Nin adiyaarkku pidhaavin sannidhi
Saeravumae sandhadham

4. Indrai dhinamadhilum
Orumithukkooda um naamathinaal
Thandha nin kirubaikkaai umakkendrum
Sthoathiram, sthoathiramae

5. Neerallaal engalukku
Paraloagil yaarundu jeevanaadhaa
Neeraeyandri igathil vaeroru
Thaetramillai paranae

Ummai Potri Paduvom – உம்மை போற்றி பாடுவேன்

Ummai Potri Paduvom
உம்மை போற்றி பாடுவேன்
எங்கள் உயர்ந்த கன்மலையே

1. பெரும் வெள்ளம் மதிலை மோதி
பெரும் காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங் கன்மலையின் நிழலே

2. எம்மை உயர்ந்த ஸ்தானங்களில்
வைத்து வைத்தவர் நீரல்லவோ
கன்மலைத் தேனும் வடியும்
எண்ணெயும் தருபவர் நீரல்லவோ

3. செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும்
எங்கள் பராக்கிரமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே

Ummai Pottri Paaduven
Engal Uyarntha Kanmalaiye

1. Perum Vellam Madhilai Mothi
Perum Kaattrum Adikkaiyil
Engal Pugalidame Engal Thanjame
Perung Kanmalaiyin Nizhale

2. Emmai Uyarntha Sthanangalil
Vaithu Vaiththavar Neerallavo
Kanmalai Thenum Vadiyum
Ennaiyum Tharubavar Neerallavo

3. Sengadalum Pilanthu Pogum
Yuththa Senaiyum Amizhnthidum
Engal Paraakkrame Engal Belanum Neere
Jeyam Eduppom Ummaale

Poovin Narkandham – பூவின் நற்கந்தம் வீசும்

Poovin Narkandham
1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் – பின்

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார் – பின்

Marida Em Ma Nesare – மாறிடா எம்மா நேசரே

Marida Em Ma Nesare
மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே

2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே

3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க

4. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே

5. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே

Maaridaa Emmaa Naesarae- Aa
Maaraathavar Anpennaalumae
Kalvaarich Siluvai Meethilae
Kaanuthae Immaa Anpithae – Aa

Aa! Yesuvin Makaa Anpithae
Athan Aalam Ariyalaakumo
Itharkinnaiyaethum Vaerillaiyae
Innai Aethum Vaerillaiyae

1. Paaviyaaka Irukkaiyilae – Anpaal
Paaril Unnaith Thaeti Vanthaarae
Neesan Entunnaith Thallaamalae
Naesanaaka Maattidavae

2. Ullaththaal Avaraith Thallinum – Tham
Ullam Pol Naesiththathinaal
Allal Yaavum Akattidavae
Aathi Thaevan Paliyaanaarae

3. Aaviyaal Anpaip Pakirnthida – Thooya
Thaevanin Vinn Saayal Anniya
Aaviyaalae Anpaich Sorinthaar
Aavalaay Avaraich Santhikka

4. Niyaaya Vithi Thinamathilae – Neeyum
Nilaiyaakum Thairiyam Peravae
Pooranamaay Anpu Peruka
Punnnniyarin Anpu Vallathae

5. Payamathai Neekkidumae – Yaavum
Paarinilae Sakiththidumae
Athu Visuvaasam Naadidumae
Anpu Orukkaalum Oliyaathae

En Meiparai Yesu – என் மேய்ப்பராய் இயேசு

En Meiparai Yesu
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா

2. தம் பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே

3. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா

4. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பராய் ஆகியதால்
என்னுள்ளமே ஆஹா என் தேவனே ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுவேன்

5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார்
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
என்னையவர் ஆயத்தமாக்கினார்
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
எனக்கென்றும் பேரானந்தமே

En Meiparaai Yesu Irukindrapodhu
En Vazhvil Kuraigal Enbathu Yedhu

Ennai Avar Pasumpullil Boomiyile
Enneramum Nadathidum Pothiniley
Endrum Inbam Aahaa Endrum Inbam
Aahaa Endrendum Inbamallavaa

Tham Paadhayil Ennai Nadathidave
En Karathai Pidithey Mun Nadapaar
Anjideney Naan Anjideney
Nan Ondrukkum Anjideney

Ennodavar Nadanthidum Pothiniley
Enge Irul Soozhnthidum Paathayiley
Engum Oli Aahaa Engum Oli
Aaha Engengum Oliyallavaa

Ennai Avar Anbaal Nirappiyathaal
Ellorukkum Nanbaraai Aagiyathaal
Ennullame Aahaa En Devane Aahaa
Ennaalum Pugazhnthiduven

En Vazhkkayai Thooymayaay Kaathukolla
Ennai Endrum Bothithu Nadathukindraar
En Greedathai Naan Petrukolla
En Ottaththai Thodarndhiduven

Vinmeedhinil Vegam Tham Varugaikkaai
Ennayavar Aayathamaakinaar
Ennaanandham Aahaa Ennaanandham
Enakendrum Paeraanandhamey

Kiristhuvin Adaikalathil – கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

Kiristhuvin Adaikalathil
கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்

1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது

2. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும்

3. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை

4. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது

Ennil Adanga Sthothiram – எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

Ennil Adanga Sthothiram
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1. பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேலுள்ள ஆகாயமும்
வானதூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில்

2. சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில்

3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே – எண்ணில்

4. பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஓயா துதி பாடுதே – எண்ணில்

Nam Devanai Thuthithu Padi – நம் தேவனைத் துதித்துப்பாடி

Nam Devanai Thuthithu Padi
நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

Poorana Aaseer Pozhinthidumae – பூரண ஆசீர் பொழிந்திடுமே

Poorana Aaseer Pozhinthidumae
1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5. குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

6. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

Yesuvai Naam Enge Kanalam – இயேசுவை நாம் எங்கே

Yesuvai Naam Enge Kanalam
இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?

1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே

2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்