All Songs by david

Meghangal Naduve – மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Meghangal Naduve
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம்

Galeeliya Kadaloram
கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்

Anbarin Nesam
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

Ithuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

Ithuvarai Seitha
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே

Chinna Chittu Kuruviye
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு …….
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
அழகாக படைச்சது யாரு

1. ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா

3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல…ல…ல…ல…ல…ல…

Padago Padagu Kadalile – படகோ படகு கடலிலே

Padago Padagu Kadalile
படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே

1. வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ

2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ

Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை

Anandamaga Anbarai Paduven
1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

Aatharam Neer Thaan Aiya – ஆதாரம் நீர்தானையா

Aatharam Neer Thaan Aiya
ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் நிலை மாற … – ஆதாரம்

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) – என் நிலை மாற … – ஆதாரம்

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் நிலை மாற … – ஆதாரம்

Sornthu Pogathe En Nanbane – சோர்ந்து போகாதே என்

Sornthu Pogathe En Nanbane
1. சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே – 2

2. என் ஆத்மநேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர்
தினமும் நடத்துவார்

3. நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும்
மனம் கலங்காதே திகையாதே உன்
இயேசு இருக்கிறார்

Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய்

Karthave Yuga Yugamai
1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்