Aatharam Neer Thaan Aiya – ஆதாரம் நீர்தானையா

Aatharam Neer Thaan Aiya
ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் நிலை மாற … – ஆதாரம்

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) – என் நிலை மாற … – ஆதாரம்

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் நிலை மாற … – ஆதாரம்

2 thoughts on “Aatharam Neer Thaan Aiya – ஆதாரம் நீர்தானையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *