All Songs by david

Yutha Raja Singam – யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

Yutha Raja Singam

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத

4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத

5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத

7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார் – யூத

8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத

Yutha Raja Singam Uyirththelunthaar
Uyirththelunthaar Narakai Jeyiththelunthaar

1. Vaethaala Kanangal Otidavae
Otidavae Uruki Vaatidavae – Yootha

2. Vaanaththin Senaikal Thuthiththidavae
Thuthiththidavae Paranaith Thuthiththidavae – Yootha

3. Maranaththin Sangilikal Theripattana
Theripattana Notiyil Muripattana – Yootha

4. Elunthaar Enta Thoni Engum Kaetkuthae
Engum Kaetkuthae Payaththai Entum Neekkuthae – Yootha

5. Maathar Thootharaik Kanndaka Makilnthaar
Akamakilnthaar Paranai Avar Pukalnthaar – Yootha

6. Uyirththa Kiristhu Ini Marippathillai
Marippathillai Ini Marippathillai – Yootha

7. Paavaththirkentu Oru Tharam Mariththaar
Avar Mariththaar Orae Tharam Mariththaar – Yootha

8. Kiristhavarae Naam Avar Paatham Pannivom
Paatham Pannivom Pathaththai Siram Annivom – Yootha

Idhu Varai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

Idhu Varai Seitha

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

1.  உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி

2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி

3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம்

Nadanthu Vantha Pathaigal Ellam
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்
நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த
நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்
நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்
நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

1. எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே
யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே
முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா
இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

2. அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா
அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா
உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்
உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்
உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

3. உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை
உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை
உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்
உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்
நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்
ஓடிவரும் தேவன்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து

Yesu Yesu Endru Azhaithu
இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை – 2
உந்தன் குரலைக் கேட்டு
உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்

1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஓளியாய்
வந்தார் மாபரன் இயேசு – உயிர்
தந்துனை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

2. பாவிகள் நம்மை மீட்கவே மண்ணில்
ஆதவனாய் ஓளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்தே – நம்மை
வேதனையில் வெற்றிபெறச் செய்தார்
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

Yesuvuke Magimai – இயேசுவுக்கே மகிமை

Yesuvuke Magimai En Raajavuke Magimai
இயேசுவுக்கே மகிமை
என் இராஜாவுக்கே மகிமை

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
என் இயேசு இராஜாவை – அல்லேலூயா

1. இயேசுவுக்கே நன்றி
என் இராஜாவுக்கே நன்றி
இயேசுவுக்கே மகிமை
என் இராஜாவுக்கே மகிமை – துதிப்பேன்

2. இயேசுவே இராஜா
இயேசுவே ஆண்டவர்
இயேசுவே கர்த்தர்
இயேசுவே மேய்ப்பர் – துதிப்பேன்

3. யாவே யீரே
தேவைகளை சந்திப்பார்
யாவே ரஃப்பா
சுகம் அளிக்கும் தேவன் – துதிப்பேன்

4. யாவே ஷம்மா
கூடவே இருக்கிறார்
யாவே எல்ஷடாய்
சர்வவல்லமை தேவன் – துதிப்பேன்

5. பரிசுத்த ஆவி
பரிசுத்த வல்லமை
பரிசுத்த அக்கினி
இப்போதே வரட்டும் – துதிப்பேன்

6. பரிசுத்த ஆவி
பரிசுத்த பிரசன்னம்
பரிசுத்த அக்கினி
இப்போதே இறங்கட்டும் – துதிப்பேன்

Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன்

Nirantharam Nirantharam
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் – நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம் – அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

Ummai Padatha Natkalum Illaye – உம்மை பாடாத நாட்களும்

Ummai Padatha Natkalum Illaye
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை

3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை

4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை

Ummai Padatha Natkalum Illaye
Ummai thaedaadha naatkalum Illaye (2)

1. Ummaiyallaamal yaarai naan naesippaen (2)
Umakkaaga allaamal yaarukkaaga vaazhuvaen
Nampungappaa undhan pillaiyai (2) – Ummai

2. Velliyai pudamidum poala ennai pudamitteer (2)
Adhanaal naan suthamaanaanae
Ponnaaga vilanga seidheerae (2) – Ummai

3. Poruthanaigal niraivaetri sthoathirangal seluthuvaen (2)
Aaraadhithu ummai uyarthuvaen
Nampungappaa undhan pillaiyai (2) – Ummai

4. En alaichalgalai ennineer kanneerum thuruthiyil (2)
Vaithu nanmai tharubavarae
Nambuvean naan ellaa naalilum (2) – Ummai

En Jebathai Ketpavare – என் ஜெபத்தை கேட்பவரே

En Jebathai Ketpavare
என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – 2
கிருபை நிறைந்தவரே
அன்பின் தெய்வன் நீரே – 2

1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2
என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை -2

2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2

Prasannam Tharum Devane – பிரசன்னம் தாரும் தேவனே

Prasannam Tharum Devane
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு

Vallamai Undu Undu Arputha Vallamai
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!

Vallamai Unndu Unndu Arputha Vallamai
Yesuvin Irathaththil!
Vallamai Unndu Unndu Arputha Vallamai
Aattukkuttiyin Iraththaththaal!

There is power, power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb.