Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன்

Nirantharam Nirantharam
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் – நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம் – அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

One thought on “Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *