All Songs by david

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

Nadaka Solli Thaarum
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்

Kalvari Mamalai Oram
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….

1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே

2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
நிந்தனை நமக்காய் சகித்தார்

Kalvaari Maa Maalaiyoram
Kodunra Kaatchi Kandaen
Kannil Neer Valinthiduthae
Enthan Meetpar Yesu Atho

1. Yerusalaemin Veethikalil
Iratha Vellam Kolamida
Thirukolam Ninthanaiyaal
Urukulainthu Sentanarae

2. Siluvai Than Tholathilae
Sitharum Than Vaervaiyilae
Sirumai Adainthavaraai
Ninthanai Nammakai Sakithaar

Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு

Ummai Pol Yarundu
உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் — உம்மைப்

1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்

2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும்

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்

Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ

Nenje Nee Kalanguvatheno
நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
நெஞ்சே நீ தவிப்பதேனோ …
ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை

1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
தூயவர் தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போது காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

Ovvoru Naatkalilum – Naan Ummai Nesikkiren – ஒவ்வொரு நாட்களிலும்

Naan Ummai Nesikkiren

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்

நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்

நான் உம்மை நேசிக்கிறேன்

எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்

உண்மை மனதுடன்

1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே

என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது

என்ன பதில் செய்வனோ (2)

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு

2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி

அழைத்தீர் என் செல்ல பெயரை (2)

வளர்த்தி இவ்வளவாக

உம் நாம மகிமைக்காக (2)

3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை

பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கினீர்

மகிமையை பலியாக்கினீர் (2)

நான் இரட்சிப்படைவதற்கு

பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு

Ovvoru naatkalilum piriyamai kadaisivarai
Ovvoru nimidamum kirubaiyai nadattiduvaar

Neer yennai nesithere
Undhan Uyirai paarkilum
Aradippen ummai naan
Unmai manadudan

Naan ummai nesikkiren
Endan uyirai paarkkilum
Aradippen ummai naan
Unmai manadudan

1. Ennai nesikkum nesaththin devanae
Ennai nesiththa nesathtin aazhamadhai
Perum kirubai ninaikkumbodu
Enna badhil Seiveno (2)
Ratchippin pathirathai
Uyarthtuven nandriyodu (2) – Ovvoru naatkalilum

2. Petra en thayum, nanbargal thallugayil
En uyir koduththu naan
Nesiththor Verukkaiyile
Nee ennudaiyavan endru solli,
Azhaitheer en Chella peyarai
Valartheer Ivvalavaga
Um naama magimaikaaga

3. Raththamparam polulla pavangalai
Paniyaivida venmaiyaga matrineer
Sondha raththam Nalginar
Magimaiyai Baliyakkineer
Naan Ratchippadaivadharkku
En Paavam Sumandu theertheer – Naan ummai

En Aathma Nesare – என் ஆத்ம நேசரே

En Aathma Nesare
என் ஆத்ம நேசரே
என் அன்பு இயேசுவே
உம்மை நான் போற்றுவேன்
என்றென்றுமாய் (2)
உம் அன்பினைப் போல
நான் கண்டதில்லையே
உலகத்தில் சொல்வேன்
உற்சாகமாய் (2)

1. பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்
பாசம் கொண்டு அன்பு வைத்தீரே
வெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்
வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம

2. வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரே
வாழ்வின் துணையாக நின்றீரே
மகிமையான மீட்பினால்
என்னை சொந்தம் கொண்டீரே
மரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம

3. அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரே
அன்பரே உமக்காய் வாழ்ந்திட
முடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரே
மீட்பரே உம் துதிகள் (புகழை) பாடிட (2) – என் ஆத்ம

4. அன்பின் ஆழம் அகலமோ நீளம் உயரமோ
யாரும் அளந்திடாதது (அறிந்திடாதது)
மாறிடாத அன்பிது என்னைத் தேடி வந்தது
முற்றும் ஜெயம் கொள்ள வைத்தது (2) – என் ஆத்ம

Yendan Nanbanae Ada – எந்தன் நண்பனே அட

Yendan Nanbanae Ada
எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே
நான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)
ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டு
அதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2)
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே

1. ஏர்டெலில் போட்டோம் கடலை
ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்
உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று
சுற்றித் திரிந்தோம் (2) (அட)
அட மனுஷனின் அன்பு பொய்யே
இயேசுவின் அன்பு மெய்யே
இதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்
கலக்கிடலாம் (2)

அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே

2. ஸ்கூலில் கடைசி பென்ச்சு
ஆனால் தியேட்டரில் முதல் சீட்டு
பரிட்சை மார்கில் நாங்கள் என்றும்
முட்டை எடுத்தோம் (2) (அட)
அட ஆகாதவன் என்று
தள்ளப்பட்ட கல்நான்
என்னை மூலைக் கல்லாய் மாற்றின இயேசு
உனக்கு உண்டு (2)
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே

Endhan Nanbane
Ada Endhan Nanbane
Naan Solluvadhu Unmai
Adhai Nambu Nanbane
Alagaana Ulagil
Namakkingu Undu
Atan Pinne Sendral
Enna Undu

1. Ada Vesttu Vesttu Vesttu Indha
Ulagam Romba Vestu
Testtu Testtu Testtu En
Yesu Romba Testtu – Endhan Nanbane

2. Airtellil Pottom Kadalai
Aircellil Anuppinom Sms
Ulakathtin Inbam Nirantaramendru
Sutrithirindom
Manusanin Anbu Poyye
Yesuvin Anbu Meyye
Idhai Purindhavaaai
Nee Vaalandhal Kalakkidalam – Endhan Nanbane

3. Skoolil Kadaisi Benchu
Aanaal Thiyettaril Mudhal Seettu
Paritchai Maakkil Naangal
Endrum Muttai Eduthom
Ada Aagaadavan Endru Thallappatta Kallai
Ennai Moolaikkallaai Maatrina
Yesu Unakku Undu – Endhan Nanbane

Jeevanulla Naatkalellaam – ஜீவனுள்ள நாட்களெல்லாம்

Jeevanulla Naatkalellaam
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
அவருக்கு கொடுத்திடுவோம் (2)
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம் (2) – ஜீவனுள்ள

1. இயேசுவும் தனக்காய் வாழாமல் – அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்கு தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள

2. ஊழியம் செய்வது பாக்கியமே – அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் – ஜீவனுள்ள

3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன – நான்
நலமாயிருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா – ஜீவனுள்ள

4. உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள

Jeevanulla naatkalellaam
Yaesuvukaai vaazhvoam
iruppadhuvoa oru vaazhvu – adhai
Avarukku koduthiduvoam (2)
Vaazhndhiduvoam naam vaazhndhiduvoam
Yaesuvukaaga naam vaazhndhiduvoam (2) – Jeevanulla

1. Yaesuvum thanakkaai vaazhaamal – avar
Namakkaai thaanae vaazhndhaarae
Uyiraiyum kooda namakku thandhaarae
Idharku badhilaai enna seivoamae
Naamum vaazhndhiduvoam yaesuvukaai – Jeevanulla

2. Oozhiyam seivadhu baakkiyamae – adhin
Palanoa indru naam ariyoamae
Kartthar oar naal vandhiduvaarae
Andru idhanpalan kondu varuvaarae
Kandu magizhndhiduvoam thalliduvoam – Jeevanulla

3. Yaaroa seiyattum enakkenna – naan
Nalamaayirundhaal adhu poadhum
Endrae suyamaai vaazhvadhinaalae
Pinnaal neeyum varunthiduvaayea
Endru unarvaayoa indrae vaa – Jeevanulla

4. Ulagathaiyae sondhamaakkinaalum
Adhinaalae laabam ondrumillaiyae
Yaesuvukaai nee edhai seidhaayoa
Adhuvae unakku udhavidumendrum
Oayaadhu uzhaithiduvoam yaesuvukaai – Jeevanulla

Magilvoom Magilvoom – மகிழ்வோம் மகிழ்வோம்

Magilvoom Magilvoom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்

பல்லவி
ஆஆ…. ஆனந்தமே
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே

1. சின்னச்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
“ஜீவன் பெற்றுக்கொள்” என்றுரைத்தார்

2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொருப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

3. அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
அவர் சமூகமத்தில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

1. Magilvoom Magilvoom
thinam agamagilvoom
Yesu raja nam sonthamaginaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar

Ha aanathanmay paramanathamay
ithu maa perum bakkiyamay – intha

2. Chinnam cheruvayathil
ennai kurithuvittar
Thuram poyenum kandukondar
Thamathu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar

3. Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thantha poorupathanai
Avar varum varai kathu kollven

4. Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven

Enakku Othasai Varum – எனக்கொத்தாசை வரும்

Enakku Othasai Varum
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே

3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே

4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே

5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்

Enakkoththaasai varum parvatham naeraai
En kangalai aeredupaen

1. Vaanamum boomiyum padaiththa
Valla dhaevanidamirundhae
Ennukkadangaa nanmaigal varumae
En kangal aeredupaen

2. Malaigal peyarnthagandridinum
Nilaimaari puviyagandridinum
Maaridumoa avar kirubai ennaalum
Aarudhal enakkavarae

3. En kaalai thallaada vottaar
Ennai kaakkum dhaevan urangaar
Isravaelai kaakkum naldhaevan
Raappakal urangaarae

4. Valappakkaththin nizhal avarae
Vazhuvaamal kaappavar avarae
Sooriyan pagalil chanthiran iravil
Saedhappaduththaadhae

5. Eththeengum ennai anugaamal
Aaththumaavai kaakkumen dhaevan
Poakkaiyum varaththaiyum paththiramaaga
kaappaarae ithu mudhalaai