All Songs by david

En Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

En Meetpar Uyirodu
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்

2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

3. ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.

Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே

Anbu Illa Ulaginilae
அன்பு இல்லா உலகினிலே
அன்பை காட்ட வந்தீரே
உண்மை இல்லா உலகினிலே
உண்மை சொல்ல வந்தீரே
என் மேல் அன்பு கூர்ந்ததால்
உம் உயிரை தந்தீரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

மழையை பார்த்தேன்
மேகத்தை பார்த்தேன்
உம் மகிமையை பார்க்க வேண்டுமே
வல்லமை பார்த்தேன்
உம் கரத்தை பார்த்தேன்
உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

வெறுமையாய் வந்தேன்
வெறுமையாய் போவேன்
என்னோடு எதுவும் வருவதில்லையே
உம்மோடு இருக்கணும்
உமக்காய் வாழணும்
என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா

Devakumara Ketkiratha
தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்

Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு

1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி

Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே

1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்

2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட

Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

Unga Prasannam Illamal – உங்க பிரசன்னம் இல்லாமல்

Unga Prasannam Illamal
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் பாட முடியாததையா

மோசை கண்ட பிரசன்னம்
நானும் காண வேண்டும்
கன்மலையின் வெடிப்பிலே
என்னை நிற்க்கச் செய்யும்
உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்
உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்
நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்
உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்
உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும்
உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும்
உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு
உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

Ezhai Enthan – ஏழை எந்தன் மீது

Ezhai Enthan Meethu
ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!

1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!

2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!

3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா

Sathanuku Saval Vidum – சாத்தானுக்கு சவால் விடும்

Sathanuku Saval Vidum
சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

சவால் …………..சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் ……………சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் …………….சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் ……………….சவாலே
நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் ……சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை

En Idhayathin Kayathai
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …

காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா