All Songs by david

Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி

Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே

1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்

2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட

Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

Unga Prasannam Illamal – உங்க பிரசன்னம் இல்லாமல்

Unga Prasannam Illamal
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் பாட முடியாததையா

மோசை கண்ட பிரசன்னம்
நானும் காண வேண்டும்
கன்மலையின் வெடிப்பிலே
என்னை நிற்க்கச் செய்யும்
உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்
உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்
நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்
உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்
உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும்
உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும்
உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு
உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

Ezhai Enthan – ஏழை எந்தன் மீது

Ezhai Enthan Meethu
ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!

1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!

2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!

3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா

Sathanuku Saval Vidum – சாத்தானுக்கு சவால் விடும்

Sathanuku Saval Vidum
சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

சவால் …………..சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் ……………சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் …………….சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் ……………….சவாலே
நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் ……சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை

En Idhayathin Kayathai
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …

காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

Enakkagave Yavaiyum Seithu Mudither- எனக்காகவே யாவையும் செய்து

Enakkagave Yavaiyum Seithu Mudither
எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும்
சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே

1. நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவைக் கொடுக்கிறேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும்
கொடுத்துடுவாரே (நினைப்பதற்கும்..)

2. அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல்
காக்கும் தேவனே (நினைப்பதற்கும்..)

3. ஆபிரகாமை அழைத்திரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும்
ஆசிர்வதியும் (நினைப்பதற்கும்..)

Enakaagave Yaavaiyum
Seithu Mudiththeer
Nandri Nandri Aiyaa
En Paavangal Yaavaiyum
Sumanthu Kondeere
Nandri Nandri Aiyaa

Ninaippatharkum Jebippatharkum
Athigamaaga Tharupavare

1. Naan Enathu Pillaikku
Nalla Eevaik Kodukkindren
Parama Pidhaa Adhaippaarkkilum
Koduththuduvaare (Ninaippatharkum)

2. Andraadam Vendiya
Aakaaram Thaarume
Theemai Ennai Anukaamal
Kaakkum Devane (Ninaippatharkum)

3. Aabirakaamai Azhaiththire
Aasirvaatham Koduththeere
Athu Pola Ennaiyum
Aasirvathiyum (Ninaippatharkum)

En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும்

En Janagal Oru Pothum
என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம்

Santhosam Santhosam Santhosame
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

1. கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

2. போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Sandhoasham sandhoasham sandhoashamae
Paraloaga sandhoashamae
Sandhoasham sandhoasham sandhoashamae
Avar samoogathil sandhoashamae
Yaesuvin samoogathil sandhoashamae

1. Karththarin yuthdhathil naam nirkumpoadhu
Kalangida thaevaiyillai
Kaigalai uyarththi aaraadhiththaal
Perum vetriyai thandhiduvaar

2. Poaraattam paadugal nam vaazhvil vandhaalum
Soarndhidavae vaendaam
Ulagaththai jeyiththavar nammudan irukkaiyil
Jeyam jeyam jeyam namakkae

Appa Pithave Konjam Parunga – அப்பா பிதாவே கொஞ்சம்

Appa Pithave Konjam Parunga
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க

1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும்

2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
பாச தந்தை எப்போதும் நீங்க தானே

3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே