All Songs by david

Naan Orupodhum – நான் ஒருபோதும் உன்னை

Naan Orupodhum
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

என்ன வந்தாலும் பயமே இல்லை

மாறாத இயேசு உண்டெனக்கு

மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர்

புயலில் என் கன்மலையே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ

தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

நல்வசனத்தின் வல்லமையாய்

வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற

அற்புதம் நடந்திடுமே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

Naan orupodhum

Naan orupoadhum unnai kaividuvadhillai
Endrurai seidhaenandroa
Kadal aazhatthilum akkini soolaiyilum
unnai kaatthidum belavaanandroa
Visha sarbangaloa singa koottangaloa
Bayam vaendaam un arugil naan
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

1. Aarudhal thara oru vaartthai illai
Enna vandhaalum bayamae illai
Maaraadha yaesu undenakku
Manadhu orupoadhum kalangavillaiyae
Aezhai enakku adaikkalamae avar
Puyalil en kanmalaiyae
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

2. Nindhaigal unnai soozhgindrathoa
Tham karangal endrum uyarndhidumae
Nalvasanatthin vallamaiyaai
Vallavarin samugam niraindhidumae
Eliyaavin dhaevan engae endra
Arpudham nadandhidumae
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

Sathikalam Neva Nanbane – சாதிக்கலாம் நீ வா நண்பனே

Sathikalam Neva Nanbane
சாதிக்கலாம் நீ வா நண்பனே
உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
நீயும் சாதனை செய்திடலாம்

1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலர்கள் மணம் வீசுதே
உறவுகள் இல்லாத பறவைகள் கூட
மகிழ்வுடன் வாழ்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
ஆதவன் ஓளி வீசுதே
வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
தினமும் ஒளிர்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

Sathikalam Neva Nanbane

Saadhikalaam neevaa nanbanae
Unnai belapaduthu neasar yaesuvaalae
Neeyum saadhanai seidhidalaamae

1.Kaalaiyil malarndhu maalaiyil maraiyum
Malargal manam veesudhae
Uravugal illaadha paravaigal kooda
Magizhvudan vaazhgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

2.Dhaevan sollaalae ulaginil udhikkum
Aadhavan oli veesudhae
Vaanatthil minnidum vinmeengal kooda
Dhinamum olirgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

En Kirubai Unakku Pothum – என் கிருபை உனக்கு போதும்

En Kirubai Unakku Pothum
என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் நான்

1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் – (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்கவில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை – என்

2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயோ இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயோ விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் – (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு – என்

Yen Alugirai Yarai – ஏன் அழுகின்றாய் யாரை

Yen Alugirai Yarai
ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்

1. கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்

2. பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்

3. கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்

Kadalin Alathile – கடலின் ஆழத்திலே மூழ்கி

Kadalin Alathile
கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்
கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா
கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் இரக்கமும் உருக்கமும்
நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே
என் இயேசையா கிருபையும் உள்ளவரே

1. தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே
என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா
என்னையும் மீட்டுக்கொள்ளும்
அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே
எங்களையும் ரட்சித்து கொள்ளும்
என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்

2. மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்
என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா
என் ஜெபமும் கேட்டருளும்
இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்
எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா
எங்கள் ஜெபம் கேட்டருளும்

3. யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்
என் தேசம் கேட்கணுமே என் இயேசையா
என் ஜனம் கேட்கணுமே
நினிவேக்கு கிடைத்த கிருபை போல
எங்களுக்கும் கிருபை தாருமே
என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே

Nigare Illatha Sarvesa – நிகரே இல்லாத சர்வேசா

Nigare Illatha Sarvesa
நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா

துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்

பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
தேவ மைந்தனாய் அவதரித்தார்

பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே

En Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

En Meetpar Uyirodu
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்

2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

3. ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.

Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே

Anbu Illa Ulaginilae
அன்பு இல்லா உலகினிலே
அன்பை காட்ட வந்தீரே
உண்மை இல்லா உலகினிலே
உண்மை சொல்ல வந்தீரே
என் மேல் அன்பு கூர்ந்ததால்
உம் உயிரை தந்தீரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

மழையை பார்த்தேன்
மேகத்தை பார்த்தேன்
உம் மகிமையை பார்க்க வேண்டுமே
வல்லமை பார்த்தேன்
உம் கரத்தை பார்த்தேன்
உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

வெறுமையாய் வந்தேன்
வெறுமையாய் போவேன்
என்னோடு எதுவும் வருவதில்லையே
உம்மோடு இருக்கணும்
உமக்காய் வாழணும்
என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா

Devakumara Ketkiratha
தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்

Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு

1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே