All Songs by david

Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen
கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே

En Vaazhvil Yesuve
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்

காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்

Then Inimaiyilum Yesuvin
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்

Then Inimaiyilum Yesuvin Naamam
Dhivya Madhuramaamae – Adhaith
Thediyae Naadi Odiyae Varuvaai
Dhinamum Nee Manamae

1. Kaasini Thenilae Nesamathaagak
Kastaththai Uththariththae – Paavak
Kasadadhai Aruththu Saabaththai Tholaiththaar
Kandunar Nee manamae – Then

2. Paaviyai Meetkkath Thaaviyae Uyiraith
Thaamae Eendhavaraam – Pinnum
Nemiyaam Karunai Nilaivaramudae
Nidham Thuthi En Manamae – Then

3. Kaalaiyil Panipol Maayamaai Yaavum (ulagam)
Ubaamayaai Neengividum – Endrum
Kartharin Paadham Nitchayam Nambu
Karuththaai Nee Manamae – Then

4. Thunbaththil Inbam Thollaiyil Nalla
Thunaivaraam Nesaridam – Neeyum
Anbadhaai Serndhaal
Anaiththu Kaappaar Aasaikol Nee Manamae – Then

5. Boologaththaarum Melogaththaarum
Pugazhndhu Pottrum Naamam – Adhaip
Poondu Kondaal than Ponnagar Vaazhvil
Puguvaai Nee Manamae – Then

Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர்

Rettham Sinthineer
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

Vara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

Vara Vinai Vanthalum
வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே

உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே

தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே

Pavathuku Nee – பாவத்துக்கு நீ மரிக்கணும்

Pavathuku Nee
பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்
சிலுவைய நீ சுமக்னும் சாட்சியாய் நீ வாழனும்…
Wanted இந்த உலகத்தைக் கலக்க
Wanted இந்த உலகத்தை ஜெயிக்க
Wanted அந்த சாத்தானை மிதிக்க

சத்தியம் அறியாதவர் நூறாரு
இயேசு பற்றி சொல்பவர் இங்கு யாரு
அபிஷேகம் பெற்றவன் நீ தானே சொல்லணும்
ஆவியில் நிரம்பினவன் நீ தானே போகணும்

சாத்தானின் ராட்சியம் அழிய வேண்டும்
இயேசுவின் ராட்சியம் கட்ட வேண்டும்
இதற்காக தானே தேவன்
அன்போடு அழைக்கிறார்
இதற்காக தானே தேவன்
தினமும் ஏங்குகிறார்

Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன

Thanthaiyum Thayum
தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடி வந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
பிள்ளைகள் ஆகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

எங்களுக்கு தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்

அனுதின உணவை எங்களுக்கு என்றும்
உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம்

Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும்

Aayiramai Perugavendum
ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள்

அதிசயங்கள் காணவேண்டும் தேவா

உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே

உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே

1. ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்

ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்

ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்

ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்

2. அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள்

மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்

கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்

எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்

3. ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்

வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்

மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்

Naan Orupodhum – நான் ஒருபோதும் உன்னை

Naan Orupodhum
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

என்ன வந்தாலும் பயமே இல்லை

மாறாத இயேசு உண்டெனக்கு

மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர்

புயலில் என் கன்மலையே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ

தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

நல்வசனத்தின் வல்லமையாய்

வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற

அற்புதம் நடந்திடுமே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

Naan orupodhum

Naan orupoadhum unnai kaividuvadhillai
Endrurai seidhaenandroa
Kadal aazhatthilum akkini soolaiyilum
unnai kaatthidum belavaanandroa
Visha sarbangaloa singa koottangaloa
Bayam vaendaam un arugil naan
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

1. Aarudhal thara oru vaartthai illai
Enna vandhaalum bayamae illai
Maaraadha yaesu undenakku
Manadhu orupoadhum kalangavillaiyae
Aezhai enakku adaikkalamae avar
Puyalil en kanmalaiyae
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

2. Nindhaigal unnai soozhgindrathoa
Tham karangal endrum uyarndhidumae
Nalvasanatthin vallamaiyaai
Vallavarin samugam niraindhidumae
Eliyaavin dhaevan engae endra
Arpudham nadandhidumae
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

Sathikalam Neva Nanbane – சாதிக்கலாம் நீ வா நண்பனே

Sathikalam Neva Nanbane
சாதிக்கலாம் நீ வா நண்பனே
உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
நீயும் சாதனை செய்திடலாம்

1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலர்கள் மணம் வீசுதே
உறவுகள் இல்லாத பறவைகள் கூட
மகிழ்வுடன் வாழ்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
ஆதவன் ஓளி வீசுதே
வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
தினமும் ஒளிர்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

Sathikalam Neva Nanbane

Saadhikalaam neevaa nanbanae
Unnai belapaduthu neasar yaesuvaalae
Neeyum saadhanai seidhidalaamae

1.Kaalaiyil malarndhu maalaiyil maraiyum
Malargal manam veesudhae
Uravugal illaadha paravaigal kooda
Magizhvudan vaazhgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

2.Dhaevan sollaalae ulaginil udhikkum
Aadhavan oli veesudhae
Vaanatthil minnidum vinmeengal kooda
Dhinamum olirgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal