Vara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

Vara Vinai Vanthalum
வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே

உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே

தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *