Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன

Thanthaiyum Thayum
தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடி வந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
பிள்ளைகள் ஆகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

எங்களுக்கு தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்

அனுதின உணவை எங்களுக்கு என்றும்
உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *