Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி

Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே

1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்

2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *