Naan Nirpathum Nirmulam
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2
உம்மைப் போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை – 2
கண்ணில் கண்ணால் வாழும் முல்லை (2)
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் – 2
நீர் இல்லா மீனைப்போல் துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளைபோல் அழுதேன் நான் – 2
மார்போடு அணைத்தீரே
ஒரு தாயைப் போல் காத்தீரே – 2 (…உம்மை)
2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
உந்தன் பாதையை மறந்தேன் நான் – 2
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உம்மில் ஜீவனை தந்தேன் நான் – 2
வழிகாட்டும் தெய்வமே
என்னைக் காக்கும் கர்த்தரே – 2 (…உம்மை)
Unga Prasannam Illamal
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் பாட முடியாததையா
மோசை கண்ட பிரசன்னம்
நானும் காண வேண்டும்
கன்மலையின் வெடிப்பிலே
என்னை நிற்க்கச் செய்யும்
உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்
உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்
நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்
உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்
உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும்
உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும்
உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு
உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
Sollal Aguma
சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா
1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்
2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்
Ezhai Enthan Meethu
ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!
1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!
2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!
3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா