Song Category: Tamil

Unnatha Devane – உன்னத தேவனே

Unnatha Devane

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா – 2

1. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே – 2
உம் முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே – 2 (…இரவெல்லாம்)

இரவெல்லாம் பகலெல்லாம்
இதயம் உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா (…உன்னத)

2. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் – 2
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் – நான் – 2 (…இரவெல்லாம்)

3. கொடியாக படரணும் உந்தன் நேசமே – 2
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் – உம் – 2 (…இரவெல்லாம்)

4. உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் – 2
உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் – 2 (…இரவெல்லாம்)

5. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே -2
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – 2 (…இரவெல்லாம்)

6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம் – 2
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம் – 2 (…இரவெல்லாம்)

Unnatha Devane En Yesu Raajane
Ummodu Innainthida En Ullam Yenguthaiyaa

1. Maruroobamaakkidum Makimaiyin Megame – 2
Um Muga Saayalaay Urumaattrum Deivame – 2

Iravellaam Pakalellaam
Ithayam Umakkaaka Thudikkuthaiyaa
Ninaivellaam Pechchellaam
Nesare Ummaip Pattriththaane Aiyaa (…Unnatha)

2. Perinbak Kadalile Oyvintri Moozhkanum – 2
Thuthiththu Makizhanum Thooyonaay Vaazhanum – Naan – 2 (…Iravellaam)

3. Kodiyaaka Padaranum Unthan Nesame – 2
Madimeethu Thavazhanum Mazhalaik Kuzhanthai Naan – Um – 2 (…Iravellaam)

4. Um Anbaip Parukida Ododi Vanthullen – 2
Ummaaka Maarida Ulakai Marakkiren – 2 (…Iravellaam)

5. Thenilum Inimaiye Thevittatha Amuthame – 2
Thediyum Kidaikkaatha Oppattra Selvame – 2 (…Iravellaam)

6. Aiyaa Um Nizhalile Aanantha Paravasam – 2
Alavidaa Perinbam Aarokkiyam Athisayam – 2 (…Iravellaam)

 

Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு

Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்

1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே

Umakku Priyamana – உமக்குப் பிரியமானதைச்

Umakku Priyamana
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே

Veru Oru Aasai – வேறு ஒரு ஆசை இல்ல

Veru Oru Aasai
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
2. இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
3. மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்

Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை

Kadanthu Vantha Pathai
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

Sarva Vallavar – சர்வ வல்லவர்

Sarva Vallavar
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)
ஆ…இது அதிசயம் தானே
ஓ…இது உண்மைதானே

1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்

Sarva Vallavar En Sonthamaanaar
Saavai Vendravar En Jeevanaanaar

Aa… Ithu Athisayam Thaanae
O…… Ithu Unmai Thaanae

1. Kandu Kondaen Oru Puthaiyal
Pettu Kondaen Oru Pokkisham
Yesuthaan En Iratchakar
Yesuthaan En Raajaa

2. Santhoshamum Samaathaanamum
En Ullathil Ponguthammaa
Paavamellaam Pokkivittar
Payangalellaam Neekivittar

3. Paralokathil Enathu Peyar
Eluthivittar En Yesu
En Vaalvin Nookamellaam
Yesuvukkaai Vaalvathu Thaan

4. Oorellaam Solliduvaen
Ulakamengum Paraisaatruven
Jeevikiraar En Yesu
Seekkiramaai Vanthiduvaar

Thuya Aviye – தூய ஆவியே

Thuya Aviye
தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத்தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Yakobe Nee – யாக்கோபே நீ வேரூன்றுவாய்

Yakobe Nee
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த

என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்

1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
2. அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ – நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்
4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
5. மேடுகளை பிளந்து ஆறுகள் தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
6. நானே உங்கள் தேவன் நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்

Enathu Manavalane – எனது மணவாளனே

Enathu Manavalane

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன்
நான் உம்மைத் தான் நேசிக்கிறேன்
[நான் உம்மோடு தான் இருப்பேன்]

1. உம் நாமம் சொல்லச் சொல்ல
என் உள்ளமெல்லாம் துள்ளுதையா – 2
உம் அன்பைப் பாடப் பாட – 2
இதயமெல்லாம் இனிக்குதையா – என் – 2

2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே – 2
உம் பாதம் அமரணுமே – 2
உம் சித்தம் அறியணுமே – நான் – 2

3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
என் இதய எண்ணமெல்லாம் – 2
உதந்தனவாய் இருப்பதாக – உமக்கு – 2

4. அழகெல்லாம் அற்றுப் போகும்
உலக எழிலெல்லாம் ஏமாற்றும் – 2
உம் அன்பு மாறாதையா – 2
ஒரு நாளும் அழியாதையா – அது – 2

5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
நான் நடக்கும் பாதையெல்லாம் – 2
உதந்தனவாய் இருப்பதாக – உமக்கு – 2

Enathu Manavaalane En Idhaya Yekkame
Iniyavare Yesaiyaa
Ummai Thaan Thedukiren
Naan Ummai Thaan Nesikkiren
[Naan Ummodu Thaan Iruppen]

1. Um Naamam Solla Solla
En Ullamellaam Thulluthaiyyaa – 2
Um Anbai Paada Paada – 2
Idhayamellaam Inikkuthaiyaa – En – 2

2. Um Mugam Paarkkanume
Um Azhagai Rasikkanume – 2
Um Paatham Amaranume – 2
Um Siththam Ariyanume – Naan – 2

3. En Vaayin Sorkkalellaam
Yettranavaai Iruppathaaga – 2
En Idhaya Ennamellaam – 2
Uganthanavaai Iruppathaaga – Umakku – 2

4. Azhagellaam Attru Pogum
Ula Ezhilellaam Yemaattrum – 2
Um Anbu Maaraathaiyaa – 2
Oru Naalum Azhiyaathaiyaa – Adhu – 2

5. Naan Paarkkum Paaivaiyellaam
Yettranavaai Iruppathaaga – 2
Naan Nadakkum Paathaiyellaam – 2
Uganthanavaai Iruppathaaga – Umakku – 2

Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே

Yesu Neenga
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்ல
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

1. சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே

2. அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

3. தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே

5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

6. எல்லாமே எனக்கு நீங்கதானே
எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே

7. முதலும் முடிவும் நீங்கதானே
முற்றிலும் காப்பவர் நீங்கதானே

8. வழியும் சத்தியமும் நீங்கதானே
வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே

9. பாவ மன்னிப்பு நீங்கதானே
பரிசுத்த ஆவியும் நீங்கதானே

Yesu Neenga Irukaiyile
Naanga Sornthu Povathilla
Neenga Ellaame Paathukolveenga

1. Samaathaana Kaaranar Neengathaane
Sarva Vallavarum Neengathaane

2. Adhisaya Devan Neengathaane
Aalosanai Karthar Neengathaane

3. Thaayum Thagapanum Neengathaane
Thaangum Sumaithaangi Neengathaane

4. Enakku Azhakellaam Neengathaane
Enathu Aasaiyellaam Neengathaane

5. Irul Neekkum Veliccham Neengathaane
Ratchitpin Devan Neengathaane

6. Ellame Enakku Neengathaane
Enakkul Vaazhbavarum Neengathaane

7. Mudhalum Mudivum Neengathaane
Muttrilum Kaappavar Neengathaane

8. Vazhiyum Sathyamum Neengathaane
Vaazhvalikkum Vallal Neengathaane

9. Paava Mannippu Neengathaane
Parisuttha Aaviyum Neengathaane