Song Category: Tamil

Um Magimaiyai Naan Kana – உம் மகிமையை நான் காண வேண்டும்

Um Magimaiyai Naan Kana
உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்

மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்

Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை

Sathurvin Kootaiyai
சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய
யூதா முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய
துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே

யூதாவின் செங்கோல்
துதியின் ஆளுகை
நம் தேவனின் ராஜ்யம்
என்றும் துதியின் ராஜ்யம்

யூதாவே நீ எழுந்து துதி
தேவ சமூகம் உன்னோடுதான்
துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்
துதி அபிஷேகம் உன்னோடு தான்

யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும்
உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும்

சமாதானத்தின் தேவனவர்
உன்னை விட்டு நீங்கமாட்டார்
ஜாதிகளும் ஜனங்களுமே
உன்னிடத்தில் சேர்த்திடுவார்

Aayiram Aayiram Nanmaigal – ஆயிரம் ஆயிரம் நன்மைகள்

Aayiram Aayiram Nanmaigal

ஆயிரம் ஆயிரம் நன்மைகள்.. அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே (2)
நல்ல எபிநேசராய்.. என்னை நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2)

1. காலை மாலை எல்லா.. வேளையிலும் என்னை
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது.. சிக்கி தவித்திடாது
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்

எல்லா நெருக்கத்திலும்.. என்னை விழாமல் காக்கும்
அன்பின் நல்ல கர்த்தரே (2) (..ஆயிரம்)

2. மரணப் பள்ளத்தாக்கில்.. நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை.. மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்

எந்தன் மாராவின் வாழ்வை.. மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே (2) (…ஆயிரம்)

Aayiram Aayiram Nanmaigal.. Anudhinam Ennai Soozhndhida
Kirubaiyum Irakkamum Anbum Kondeere (2)
Nalla Ebinesaraai.. Ennai Nadathi Vandheere
Nandri Solla Vaarthai Illaiye (2)

1. Kaalai Maalai Ella.. Velaiyilum Ennai
Nadathum Um Karangal Naan Kanden
Thevai Perugum Podhu.. Sikki Thavithidaadhu
Udhavum Um Karangal Naan Kanden

Ellaa Nerukkaththilum.. Ennai Vizhaamal Kaakkum
Anbin Nalla Karthare (2) (…Aayiram)

2. Maranap Pallaththaakkil.. Naan Nadandha Velai
Meetkum Um Karangal Naan Kanden
Vaadi Nindra Velai.. Madindhidaadhu Ennai
Thaangum Um Karangal Naan Kanden

Endhan Maaraavin Vaazhvai.. Madhuramaai Maattrum
Anbin Nalla Karthare (2) (…Aayiram)

 

Kaakkum Karangal – காக்கும் கரங்கள் உண்டெனக்கு

Kaakkum Karangal
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை!

2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்

3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்

4. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

நம்புவேன் இயேசுவை!
நம்புவேன் இயேசுவை!

Kaakkum karangal undenakku
Kaathiduvaar kirubaiyaalae
Allaelooyaa paadippaadi
Alaigalai naan thaandiduvaen

Nambivaa yaesuvai
Nambivaa yaesuvai

1. Nindhanaigal poaraattam vandhum
Needhiyin dhaevan thaanginaarae
Naesakkodi en mael parakka
Naesarukkaai jeevithiduvaen

2. Kanmalaigal peyarkkum padiyaai
Karthar ennai karampidithaar
Kaathirundhu belan adainthu
Kazhugu poala ezhumbiduvaai

3. Aththimaram thulir vidaamal
Aattumandhai mudhalatraalum
Kartharukku kaathiruppoar
Vetkappattu poavadhillai

Nambuven yaesuvai
Nambuven yaesuvai

Yesuve Andavar Yesuve Andavar – இயேசுவே ஆண்டவர் இயேசுவே

Yesuve Andavar Yesuve Andavar
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர்

1. நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம்

2. இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர்

3. நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே

Magimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு

Magimaiyin Raja Magimaiyodu

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்

ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே

1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூரணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே (…மகிமையின்)

Magimaiyin Raajaa Magimaiyodu
Varukindraar Megameethil

Aa..Aa.. Aanandhame Aanandhame
Aanandhame Peraanandhame

1. Boomi Adhisayikka Vaanor Aarpparikka
Thoothar Thoniyudane Megameethil Varuvaar
Anbargal Naangal Yesuvai Santhippom
Aanandham Aanandhame (…Magimaiyin)

2. Aasai Magibanavar Pithaavin Magimaiyodu
Nesa Manavaattiyai Maruroobamaakka Varuvaar
Aavalaai Naamum Yesuvai Santhippom
Aanandham Aanandhame (…Magimaiyin)

3. Suththa Pragaasamaaga Siththira Thaiyalaadai
Thooya Neethiyudane Venvasthiram Tharippom
Vinnavar Saayalil Yesuvai Santhippom
Aanandham Aanandhame (…Magimaiyin)

4. Aaviyil Manavaattiyum Azhaiththidum Neramallo
Aayaththa Vizhippudane Pooranamadainthiduvom
Kaalamum Sendrathu Neramum Vanthathu
Aanandham Aanandhame (…Magimaiyin)

 

Yaakoba Pola Naan – யாக்கோபைப் போல நான்

Yaakoba Pola Naan

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
நான் விட மாட்டேன்

1.  அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

2. கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா

3. தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

Unga Vasanam – உங்க வசனம் மனமகிழ்ச்சியா

Unga Vasanam

உங்க வசனம் மனமகிழ்ச்சியா
இல்லாமல் போனா என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்

பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ

மரண இருளில் நடக்கினற போது-கோலும்
தடியுமாக தேற்றுதையா உம் வசனம்
துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது
உயிர்பித்து உயர்த்துதையா
உம் வசனம் தானையா

உமது வேதத்தை இரவும் பகலும்
தியானம் செய்வதினால்
பாக்கியமாய் உயர்த்துதையா
பச்சையான மரமாக இலை உதிராமல்
காலமெல்லாம் கனிகொடுத்து
உயர்த்துதையா உம் வசனம்

உமது வசனம் உட்கொள்ளும்போது
இதயம் அனலாகி கொழுந்து
விட்டு எரியுதையா
உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து
எழும்புதையா-சேனையாய் எழும்பி
நின்று சத்துருவை துரத்துதையா

Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே

Yellam Um Kirubaiye

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே

நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை

Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

Seitrilirunthu Thuki Yeduthar

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்

பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்

என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
ஆலேலுயா நான் சுத்தமானேன்