Song Category: Tamil

Aayirangal Parthalum – ஆயிரங்கள் பார்த்தாலும்

Aayirangal Parthalum

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
Ummai Pole Azhagae Innum Kandepikkellaye
Aayiranggal Paarthalam Kodisanam Irunthalam
Yesuvae Pole Azhagae Innum Kandepikkellaye

Naan Unggale Marantha Pothum
Neengge Enna Marakeve Ille
Naan Keele Vizhunthe
Neenge Enna Vitte Kodekellaye
Ade Manushan Maranthe
Neenge Enna Thooke Maarekellaye

Ummai Aarathippen En Azhagae
Enna Manikka Vanthe Azhagae
Ummai Paade Ummai Puzhalae
Oer Naave Patthalaye-2x

Kaase Panam Illame Mughavaari Illame
Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
Kaase Panam Illame Mughavaari Illame
Thanimayil Naan Aluzthathe Neer Maarakkeleye
Neenge Enna Vitte Kodekellaye

Naan Udangge Poi Kidenthen
Naan Norukkapatte Kidenthen
Yenna Otti Serke Neenge Vanthathe Naan Maarakellaye
Yen Kannerai Neengge Thudacha Vittethe Naan Maarakellaye

En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி

En Sirumaiyai Kannokki
Beer lahai rohi
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்

துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை

belavanai ennai – El Yeshuran
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

ஏல் யெஷுரன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷுரன்
எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

1. நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

2. பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Vaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்

Vaanam Vaalthatum
வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே – வானம்

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

Vaan Velli Pragaasikkudhae – வான் வெள்ளி பிரகாசிக்குதே

Vaan Velli Pragaasikkudhae
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Pragaasikkudhae
Ulagil Oli Veesidumae
Yesupran Varum Velai
Manamae Magilvagidumae(2)

1. Pasum Pillanai Manjathilae
Siru Paalagan Thuyilgindraar
Avar Kannayarvaar Nammai Kandiduvaar
Nal Aasigal Kooriduvaar – Vaan

2. Igameedhinil Anbudanae
Inba Seidhiyai Kooriduvom
Magilvodu Dhinam
Pugazh Paadiduvom
Avar Paadham Panindhiduvom – Vaan

Aabiragamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கல்லின் மனைபோல கணவனும்
இல்லின் விளக்கென காகையும் – ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று
நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
நல்வாழ்வு வாழவே!

Aabiragamai Aasirvathitha
Aabiragaamai Aaseervathiththa Aanndavaa Arulumae

1. Selvi Manamakal – XXXXX im
Selvan Manamakan – YYYYY im – Aaa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Illaramaam Inpa Nallarach Solaiyil
Innisai Yeluppi Ingithamaay Ini
Innainthu Vaalavae!

2. Kallin Manaipola Kanavanum
Illin Vilakkena Kaakaiyum – Aa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Nankalamaam Pala Nanmakkalaip Pettu
Naanilanthanilae Nallor Nalam Naati
Nalvaalvu Vaalavae!

Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில்

Manavaazhvu Puvi
பல்லவி

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

சரணங்கள்

1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல

Manavaazhvu Puvi Vaazhvinil Vaazhvu – Mangala Vaazhvu

Vaazhvinil Vaazhvu
Manavaazhvu Puvi Vaazhvinil Vaazhvu
Maruviya Sopana Suba Vaazhvu

Saranangal

1. Thunai Piriyadhu, Thogaiyim Maadhu
Suba Mana Magalivar Ithu Pothu
Manamuraiyodu Vasanam Vidaadhu
Vandhanar Umatharul Perave Idhu – Nalla

2. Jeeva Dhayagaraa, Srushtiyadhikaaraa
Dheiveega Maamana Valangaraa
Devakumaaraa, Thiruvellaiyooraa
Saerndhavarkkarul Tharaa Thiruppeeraa? – Nalla

3. Kudiththana Veeram, Gunamulla Thaaram
Koduththu Kondaal Adhu Samushaaram
Adakkamaachaaram, Anbu, Udhaaram
Ambuvidhanil Manai Kalangaaram – Nalla

Mangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை

Mangalam Sezhikka
பல்லவி

மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே

சரணங்கள்

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

Mangalam Sezhikka Kirubai Aruzhum
Mangala Naadhane — 2

1. Mangalam Nithiya Mangalame
Mangalam Muthiyum Naadanum nee — (2)
Engal Pungavane, Engal Thungavane
Uthama Sathiya, Nithiya Thathuva, Metha Magathuva
Athanukathanama, Aaviram Thevane — (2) — Mangalam

2. Mangala Manamagan XXXX -ukkum
Mangala Manamagal XXXX – ukkum — (2)
Mannuvelarkum, Maganubavarkum
Bakthiyudan Buthi, Mukthiyalithidum
Nithiyane Ummai, Thuthiyam
Seithidum Sathiya Vetharkum — (2) — Mangalam

Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள்

Rojapoo vasamalargal
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ