Nambidu Nambidu Yesuvai – நம்பிடு நம்பிடு இயேசுவை நம்பிடு

Nambidu Nambidu Yesuvai
நம்பிடு நம்பிடு இயேசுவை நம்பிடு
உன் துக்கம் நீங்கிடுமே
வந்திடு வந்திடு இயேசுவிடம் வந்திடு
உன் வாழ்வை மாற்றிடுவார்
உன் கவலைகள் தீர்த்திடுவார்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்

இயேசு என்னும் நாமத்திலே
விடுதலை விடுதலையே
இயேசு என்னும் நாமம் சொல்ல
பேய்கள் நடுங்கிடுதே – நம்பிடு

பாவமெல்லாம் போக்கிடுவார் இயேசுவின் இரத்தத்தாலே
சாபமெல்லாம் நீக்கிடுவார்
சிலுவை மரணத்தாலே – நம்பிடு

பாவமில்லை மரணமில்லை
இயேசு ஜெயமெடுத்தார்
பயமுமில்லை திகிலுமில்லை
இயேசு உயிர்த்தெழுந்தார் – நம்பிடு

பரிசுத்த ஆவியைத் தந்திடுவார் வல்லமை பெற்றிடவே
பரிசுத்த ஜீவியம் செய்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் – நம்பிடு

எக்காள சத்தம் கேட்டிடவே இயேசு வந்திடுவார்
ஆயத்தமாக காத்திருப்போம் பரலோகம் சென்றிடவே – நம்பிடு

Nambidu Nambidu Yesuvai Nambidu
Un Thukham Neengidumey
Vanthidu Vanthidu Yesuvidam Vanthidu
Un Valvai Matriduvar
Un Kavalaighal Thirthiduvar
Un Kannirai Thudaithiduvar

Yesu Ennum Namathiley
Viduthalai Viduthalaiyey
Yesu Ennum Naamam Solla
Peighal Nadunghiduthey – Nambidu

Pavamellam Pokhiduvar
Yesuvin Irathathaley
Sabhamellam Nikhiduvar
Siluvai Maranathaley – Nambidu

Pavamillai Maranamillai
Yesu Jeyameduthar
Bayamumillai Thighilumillai
Yesu Uyirthelunthar – Nambidu

Parisutha Aaviyai Thanthiduvar Vallamai Petridavey
Parisutha Jeeviyam Seithiduvom Satchiyai Valnthidavey – Nambidu

Ekhala Satham Ketidavey Yesuvey Vanthiduvar
Aayathamagha Kathirupom Paralogham Sendridavey – Nambidu

Yesuvin Nesathal En – இயேசுவின் நேசத்தால் என்

Yesuvin Nesathal En

இயேசுவின் நேசத்தால் என் உள்ளம் பொங்குதே
அவ்வன்பின் மாட்சிமை அறிவுக் கெட்டுமோ

அனுபல்லவி
=========
ஆ! என்ன ஆழமே இயேசுவின் நேசமே
அதன் தியானமே ஜீவிய பாக்கியமே

சரணங்கள்
========
1. லோகமுண்டாகுமுன் என்னையும் கண்டாரே
லோகத்தில் வந்து தன் ஜீவனைத் தந்தாரே
உன்னத அழைப்பால் தன்னோடு தங்கிட
என்னைத் தகுதியாய் எண்ணிய நேசமே – இயேசுவின்

2. சீயோனில் எனக்காய் மூலைக்கல்லாகியே
சீயோனில் என்னையும் சேர்த்தொன்றாய் கட்டியே
மேலோக நாதரின் வேலையை முடித்த
மேலான சிற்பியாம் ஏசுவின் நேசமே – இயேசுவின்

3. உன்னத அன்பென்னும் ஒப்பற்ற ஈவினால்
தன்னைப்போல் என்னையும் தெய்வீகமாக்குவார்
சத்துருவா மெனைத் தம் சொந்தமாக்கிய
உத்தமர் ஏசுவின் உன்னத நேசமே – இயேசுவின்

4. மணவாளன் இயேசுவின் மங்கள நாளதில்
மணவாட்டி கூட்டத்தில் மாபாவி சேர்ந்திட
கொடிய பாடுகள் குரூர யூதரால்
காரணமின்றியே சகித்த நேசமே – இயேசுவின்

5. ஜீவ கிரீடமும் ஜோதியாம் அங்கியும்
நீதியின் செங்கோலும் தரித்து வாழ்ந்திட
முள்முடி அணிந்து நிந்தையும் சகித்த
மன்னாதி மன்னனின் மாறாத நேசமே – இயேசுவே

6. மீட்பின் சங்கீதங்கள் சீயோனில் பாடுவேன்
மேலோக தூதரும் அப்பாடல் பாடிடார்
கலவாரிக் குன்றின்மேல் கை காலறையுண்ட
கர்த்தாதி கர்த்தரின் காதல் என் கீதம் – இயேசுவின்

Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே

Sirushtipin Athipathiye
சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..

I have found a friend in Jesus – The Lily Of The Valley

The Lily Of The Valley Lyrics.

I have found a friend in Jesus, He’s everything to me,
He’s the fairest of ten thousand to my soul;
The Lily of the Valley, in Him alone I see,
All I need to cleanse and make me fully whole.

In sorrow He’s my comfort, in trouble He’s my stay,
He tells me every care on Him to roll; Alleluia!
He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul.

He all my grieves has taken, and all my sorrows borne,
In temptations He’s my strong and mighty tower;
I have all for Him forsaken, and all my idols torn,
From my heart, and now He keeps me by His power.

Though all the world forsake me and Satan tempts me so,
Through Jesus I shall safely reach the goal
He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul.

He will never, never leave me, nor yet forsake me here,
While I live by faith and do His blessed will;
A wall of fire about me, I’ve nothing now to fear,
With His manna He my hungry soul shall fill.

Then sweeping up to glory to see His blessed face,
Where the rivers of delight shall ever roll; Alleluia!
He’s the Lily of the Valley, the Bright and Morning Star,
He’s the fairest of ten thousand to my soul…

Karthar Uyirthelunthaar – கர்த்தர் உயிர்த்தெழுந்தார்

Karthar Uyirthelunthaar
கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்
கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

1. காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியே சென்றனரே
அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே

2. மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தான்

3. பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்தி சென்றார்

Karthar Uyirthelunthaar – Innum
Kallarai Thiranthirukka
Narseythi Tharisanangal
Saatri Keerthanam Panniduvom

1. Kaarirulil Kannnneerudan
Kallarai Nokkiyae Sentanarae
Arputha Kaatchiyum Kantida Sthirekal
Aacharyam Adainthanarae

2. Mariyalae Endra Satham
Maa Thikaipaai Aval Kaetidavae
Ratchakar Tharisanam Kandu Munnodi
Rapooni Endralaithaan

3. Payanthidavae Sesharkalae
Pootina Ullarai Thanginarae
Mei Samaathaanathin Vaakkukal Koori
Messiyaa Vaalthi Sendaar

Uyirodu Ezhunthavar – உயிரோடு எழுந்தவர் நம்

Uyirodu Ezhunthavar
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே – 2

ஜெயித்தவர் மரணம் ஜெயித்தவர்
உயிர்த்தார் உயிரோடெழுந்தார் – 2

1. கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே – உயிரோடு

2. வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட
நோய்களை தீர்த்திட வீரமாய் எழுந்தாரே – உயிரோடு

3. புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட
அபிஷேகம் செய்பவர் மகிமையாய் எழுந்தாரே – உயிரோடு

Sarva Valla Devane – சர்வ வல்ல தேவனே

Sarva Valla Devane
சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா (2)

1. பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே

2. வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே

3. மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே

Karthar En Nambikkai – கர்த்தர் என் நம்பிக்கை

Karthar En Nambikkai
கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

அல்லேலூயா அல்லேலூயா (4)

1. வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

2. சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Karthar En Nambikkai Thurukamaanavar
Kanmalai Kottaiyum Iratchippumaanavar
Ataikkalam Pukalidam Kaedakam Entar
Aapaththu Naalil En Apayamumaavaar

Alleluyaa Alleluyaa (4)

1. Vaanam Asainthathu Poomi Athirnthathu
Paathaala Kattukal Kalantu Ponathu
Paarthalaththin Raajan Uyirthelunthaarae
Karthar Karthar Entu Poomi Mulanguthae

2. Samuththiraththin Mael Athikaaramutaiyavar
Sannithi Pirakaaraththin Akkiniyaanavar
Singaanam Entumaay Veettirukkavae
Siluvaiyil Mariththu Uyirthelunthaarae

Parisuthar Yesu – பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

Parisuthar Yesu
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்

1. சடுதி பூமி அதிர்ந்ததே
சரீரம் வைத்த கல்லறை
அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றுமில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை – பரிசுத்தர்

2. அழிவைக் காணார் பரிசுத்தர்
அகல பாதாளம் வென்றார்
பூமியிலே தாழ்விடங்களிலே
புண்ணியராக இறங்கினாரே
சிறைப் பட்டவரை சிறையாக்கி
சிறந்த வரங்கள் அளித்தாரே
வானாதி வானம் ஏறினாரே
வலது பாரிசம் வீற்றிடவே – பரிசுத்தர்

3. பரிசுத்தாவி பெலத்தினால்
மரித்தவர் எழுந்தாரே
சரீரமாம் தம் திருச்சபை மேல்
சத்திய ஆவி பொழிந்தனரே
ஆவியால் தேவன் இறங்கிடவே
ஆவியால் தேகம் நிரம்பிடுதே
ஆகமதில் உலவுகின்றார்
ஆனந்த பாக்கியம் அடைகிறோமே – பரிசுத்தர்

4. பரம சீயோன் சேருவோம்
மரணமோ நம் ஜீவனோ
கடைசி நேரம் கேட்டிடுவோம்
எக்காள சத்தம் முழங்கிடுமே
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள்
கல்லறை திறக்க எழும்பிடவே
மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
மகிமை அடைந்தே பறந்து செல்வோம் – பரிசுத்தர்

Alleluyaa! Alleluyaa! – அல்லேலூயா! அல்லேலூயா!

Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. கல்லறையின் கல் திறந்திடவே
காவலர் நடுங்கிடவே
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்

2. வானத்தின் சேனை துதித்திடவே
வேதாள கணங்கள் ஓடிடவே
முன்னுரைத்த வாக்கின்படி
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்

3. பார்தலம் யாவும் படைத்தவரை
பூமியும் தாங்கிடுமோ
ரூபித்தாரே தேவனென்று
மரணத்தை வென்று எழுந்தது

4. மரித்தவர் ஓர் நாள்
எழும்பிடுவர் மா தேவன்
இயேசுவைப் போல் பாக்கியமாம்
வாழ்வினையும் பரிசுத்தர்
இயேசு அளித்திடுவார்

5. சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
மத்திய வானத்திலே
தாம் வரும் அந்நாளினிலே
மகிமையின் சாயலாய் மாற்றிடு