Song Tags: Cross Tamil Songs

En Yesuve En Nesare – என் இயேசுவே என் நேசரே

En Yesuve En Nesare

என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ
என் இதயம் நெகழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே

கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
பெலன் தந்து என்னை தாங்கினீரே

தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா
அநாதையை போலவே சிலுவையிலே
அன்பினால் எனக்காக தொங்கினீரே

உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என்னையே உமக்காக தருகிறேன்

En Yesuve En Nesare
Yen Intha Paadukalo
En Ithayam Nekalinthiduthae
Um Mukam Paarkaiyilae

Kaikalil Kaalkalil Aannikalaal
Thalumpukal Aettathu Enakkaakavo
Pelaveenam Nnoykalai Sumanthu Konnteer
Pelan Thanthu Ennai Thaangineerae

Thalaiyinil Mulmuti Thulaiththidavae
Thaakaththaal Thaviththae Thutiththeeraiyaa
Anaathaiyai Polavae Siluvaiyilae
Anpinaal Enakkaaka Thongineerae

Ulappatta Nilampol Urukkulaintheer
Udal Ellaam Kaayangal Aettaraiyaa
Ennathaan Eedaaka Thanthiduvaen
Ennaiyae Umakkaaka Tharukiraen

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

Punniyar Ivar Yaaro
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punniyar Ivar Yaaro Veelnthu Jebikum
Purushan Sanjalam Yaatho

Thannilal Solaiyilae Saamanadu Vaelaiyilae
Mannnnil Kuppura Veelnthu Vanangimantati Kenjum

Velai Neengaatho Venkiraar Kodumarana
Vaethanai Yuttenenkiraar
Aaluthaviyumillai Atiyaar Thuyilukintar
Neelun Thuyarkadalil Neenthith Thathalikkintar

Paathiram Neekku Menkiraar Pithaavae Intha
Paadakalaatho Venkiraar
Naethiram Neer Poliya Nimalan Maeniyil Raththam
Neettu Viyarvaiyaaka Nilaththil Sottamantadum

Ensitham Malla Venkiraar Appaa Nin Sitham
Entaikumaaka Venkiraar
Anbin Kadavul Thamatharung Karaththilaeyeentha
Thunba Paathirathati Vandalaiyum Parukum

Mulmudi Sudiya Aandavar – முள்முடி சூடிய ஆண்டவர்

Mulmudi Sudiya Aandavar
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்

கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

Mulmudi Sudiya Aandavar
Namakkaay Mariththaar

Kolgathaa Malaiyilae
Yesu Paadukal Sumanthaar

Nam Paavam Theerika Paliyaanaar
Iratham Sinthi Meetar
Kallanai Pola Katundaarae
Unthanai Meettidavae

Vaarinaalae Adikappatar
Paavi Enakaaga
Aapathilae Thunaiyaaga
Emmai Kaarum Dhaeva

Kaal Kaikalilae Aannipaaya
Mutkireedam Pinni Sooda
Thaasarkalai Kaaththa Yesu
Paliyaaka Maandaarae

Kolkatha Malai Meethile – கொல்கொதா மலை மீதிலே

Kolkatha Malai Meethile
கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்

அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்

மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்

உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்

செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்

வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை

Kalvaari Siluvayilae – கல்வாரி சிலுவையிலே

Kalvaari Siluvayilae
கல்வாரி சிலுவையிலே
கள்வர்கள் நடுவினிலே -2
கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட
பாடு அவமானங்கள் -கல்வாரி

நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே -2
நன்றி நன்றி ஐயா….
நன்றி இயேசய்யா -2

1. பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர் -2
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே -2 -நினைத்து

2. எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2
எத்தனை என்னையுமே உத்தமனாக்கினீரே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2
-நினைத்து

Kalvaari Siluvayilae
Kalvarkal Naduvinilae-2
Karththan Yesu Enakkaaka patta
Paadu Avamaananhal-Kalvaari

Ninaithu Ninaithu Thuthikkindrenae
Ummai Nokki Parkkindraene-2
Nandri Nandri Aiya
Nandri Yesaiyah -2

1. Paava Saaba Rogangal Yaavum
Siluvaiyilae Sumanthu Neer Theertheer-2
Unthan Thazhumbugalaal Poorana Sugamanene
Sinthina Rathathinaal Meetpinai Petraene -Ninaithu

2. Ethanayo Throgam Naan Seithaen
Ithanai En mel Anbu Vaitheerae -2
Ethan Ennaiyumae Uthamanaakkineerae
Sinthina Rathathinaal Meetpinai petraene -Ninaithu

Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது

Nalla Kalam Porakuthu
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

En Meetpar Sendra Paathayil – என் மீட்பர் சென்ற பாதையில்

En Meetpar Sendra Paathyil
என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்

1. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

2. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

3. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை
நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

4. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

En Meetpar Sendra Paathaiyil
Nee Sella Aayaththamaa
Kolkathaa Malai Vaathaiyil
Pangaip Peruvaayaa

Siluvaiyai Naan Vidaen (5)
Siluvaiyai(2) Naan Vidaen

2. Ooraar Inathaar Mathiyil
Thunpam Sakippaayaa
Moorkkar Kopikal Naduvil
Thidanaai Nirpaayaa

3. Thaakathaalum Pasiyaalum
Thoynthaalum Nirpaayaa
Avamaanangal Vanthaalum
Siluvai Sumapaayaa

4. Paavaathmaakkal Gunappada
Nee Thatham Seyvaayaaseyvaayaakolai
Nenjar Thidappada
Meiyuththan Seivaayaa

5. Vaalnaalellaam Nilai Nintu
Siluvaiyai Sumappaenae
Deva Arulinaal Vendru
Mael Veettach Seruvaenae

Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்

Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு

1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்

Kalvari Mamalai Oram
கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ….

1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே

2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்
நிந்தனை நமக்காய் சகித்தார்

Kalvaari Maa Maalaiyoram
Kodunra Kaatchi Kandaen
Kannil Neer Valinthiduthae
Enthan Meetpar Yesu Atho

1. Yerusalaemin Veethikalil
Iratha Vellam Kolamida
Thirukolam Ninthanaiyaal
Urukulainthu Sentanarae

2. Siluvai Than Tholathilae
Sitharum Than Vaervaiyilae
Sirumai Adainthavaraai
Ninthanai Nammakai Sakithaar

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை (என்றும்)
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (இன்னமும்) – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம் (…கல்வாரி)

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (…கல்வாரி)

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (…கல்வாரி)

Kalvaari Snegam Karaiththidum Ennai (Endrum)
Kalmanam Maattri Karainthoda Seiyyum – 2

1. Kaalangal Thorum Kaavalil Ullor
Kaanattum Ummai Kalippodu Endrum (Innamum) – 2
Kurusathin Raththam Kural Kodukkattum – 2
Kumbiduvorai Kunamaakkum Vegam (…Kalvaari)

2. Irundathor Vaazhvil Innamum Vaazhvor
Iniyaavathu Um Thirumugam Kaana – 2
Naathaa Um Snegam Perugattum Ennil – 2
Ennai Kaanuvor Ummai Kaanattum (…Kalvaari)

3. Arpamaana Vaazhvu Arputhamaai Maara
Anaiththaiyum Thanthen Aatkollum Devaa – 2
Naan Sirugavum Neer Perugavum – 2
Theebaththin Thiriyaai Eduththaatkollum (…Kalvaari)