Song Tags: Tamil Christmas Song

Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள்

Magilnthu Kalikurungal
மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

Malarae Malarae – மலரே மலரே வெள்ளி

Malarae Malarae

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Malarae Malarae Velli Malarae Pon Manthaarappozhuthu .. Im
Mannil Puuththa Malarae – Uyar Vinnin Vaenthar Varavu

1. Vaanilae Manthaappu Vin Thuuthar Manathil Sirippu
Ulakil Amaithi Vaazhum Makizhssi Naalum Nilavum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

2. Vaazhvilae Vanthaalum Ennaimaarri Amaikka Vaarumae
Ulakam Ummaik Kaanum Uvakai Kollum Naalum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

Mei Bhakathara – மெய் பக்தரே நீர்

Mei Bhakathara
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்

Nadu Kulir Kalam – நடுக் குளிர் காலம்

Nadu Kulir Kalam
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே

2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே

3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே

4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்

5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

Piranthar Or Palagan
1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே

5. ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Vaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்

Vaanam Vaalthatum
வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே – வானம்

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

Vaan Velli Pragaasikkudhae – வான் வெள்ளி பிரகாசிக்குதே

Vaan Velli Pragaasikkudhae
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Pragaasikkudhae
Ulagil Oli Veesidumae
Yesupran Varum Velai
Manamae Magilvagidumae(2)

1. Pasum Pillanai Manjathilae
Siru Paalagan Thuyilgindraar
Avar Kannayarvaar Nammai Kandiduvaar
Nal Aasigal Kooriduvaar – Vaan

2. Igameedhinil Anbudanae
Inba Seidhiyai Kooriduvom
Magilvodu Dhinam
Pugazh Paadiduvom
Avar Paadham Panindhiduvom – Vaan

Yesu Manidanaai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

Yesu Manidanaai Piranthar
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

4. பொன் பொருள் தூபவர்க்கம் – வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

5. அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே – கூறி
தூயனை புகழ்ந்தனளே – இயேசு

6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம் – இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

Yesu Manidanaai Piranthar
Indha lohathai meettidavae
Iravaian Oliyai Irulil Uthithaar
Indha Narcheithi Satriduvoam

1. Meipparhal Iravinilae – Thangal
Madhaiyai Kathirukka
Vanathilae thoendri
Thevani Thuthithanarae – Yesu

2. Alosanai Kartharae Ivar
Arputha Manavarae
Vin Samathana Pirabhu Sarva
Vallavar Pirandhanarae – Yesu

3. Mattu Thozhyvathilae – Paran
Munnilaiyil Pirandhar
Thazhmaiyai Pin Patruvoam – Avar
Aezhaiyin Pathaiyilae – Yesu