Abishega Olivamaram – அபிஷேக ஒலிவ மரம்

Abishega Olivamaram
அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர்

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன்

One thought on “Abishega Olivamaram – அபிஷேக ஒலிவ மரம்

  1. மிக நேர்த்தியான பிரசன்னம் நிறைந்த பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *