Enna Seiyya Virumbukintreer – என்ன செய்ய விரும்புகின்றீர்

Enna Seiyya Virumbukintreer

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)
என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே
நான் என்ன செய்ய விரும்புகின்றீர்

1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்
அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்
கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை
கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை

2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க
தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய
பாடுகளின் பாதை ஆனாலும்
ஓடுவேன் உமக்காக எந்நாளும்

3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை
உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க
உந்தனின் சமூகத்தில் நிற்கும்போது
நான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *